இடுகைகள்

Khudiram bose லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மீண்டும் பிறப்பேன்… குதிராம் போஸ்…

படம்
  பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கல்கத்தா தமிழ்ச்சங்கத்தின் அழைப்பின்பேரில் நாங்கள் எங்கள் பட்டிமன்றக் குழுவோடு கல்கத்தா சென்றிருந்தோம். நிகழ்ச்சி முடிந்தபிறகு கல்கத்தாவின் பல இடங்களைச் சுற்றிப் பார்த்தோம்.  அதில் முக்கியமாக எங்களைக் கவர்ந்தது விக்டோரிய மகாராணியின் அரண்மனையும் (Victoria Memorial) அதில் அமைந்திருந்த அருங்காட்சியகமும்தான் (Indian Museum) . நாங்கள் அந்த அருங்காட்சியகத்தில் பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப்பொருட்களையும் ஓவியங்களையும் பார்த்துக்கொண்டு வந்தோம்.  அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான ஓவியங்களில் ஒன்று என்னைச் சற்றுநேரம் திகைக்க வைத்தது. அந்த ஓவியத்திலிருந்த இளைஞனைப் பற்றி நான் பலமுறை மேடைகளில் பேசியிருக்கிறேன், பலர் பேசக் கேட்டிருக்கிறேன்.  18வயதே ஆன அந்த இளைஞர், அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவின் நிலையை எண்ணி வருந்தி, அதற்கு மாற்று ஆயுதப்புரட்சிதான் என்று துணிந்து பல்வேறு செயல்களை ஆங்கிலேயருக்கு எதிராகச் செய்துவந்தார். அதன்காரணமாகக் கைது செய்யப்பட்டார். அவருக்குத் தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டது.  நாளை விடிந்தால் அவருக்க...