இடுகைகள்

வீரமாமுனிவர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அகராதியின் தந்தை… வீரமாமுனிவர்…

படம்
பழைமையும் பெருமையும் மிக்க இந்தியப் பெருநாட்டின் செல்வவளத்தை, இயற்கை வளத்தைக் கேள்வியுற்ற போர்ச்சுக்கீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், ஆர்மீனியர்கள் போன்றோர் இந்நாட்டுக்கு முதலில் வியாபாரம் செய்யத்தான் வந்தனர். வந்த இடத்தில், இந்தியாவின் ஒற்றுமையின்மையைக் கண்டபின்பு, அவர்களெல்லாம் தங்களது துப்பாக்கி, பீரங்கி பலத்தால் இந்தியாவின் பல பகுதிகளை ஆளத் தொடங்கினார்கள். இப்போட்டியில் வென்றவர்கள் ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும்தான். (வந்தவாசி என்ற இடத்தில் நடந்த போர்தான் இந்த அதிகாரப் போட்டியைத் தீர்மானித்தது) பிரெஞ்சுக்காரர்கள் பாண்டிச்சேரி, காரைக்கால், கோவா, ஆகிய பகுதிகளைக் கைப்பற்ற, இந்தியா முழுமையும் ஆங்கிலேயரின் ஆளுகைக்குக் கீழ் வந்தது. ஆங்கிலேயர்கள் இந்தியாவில் ஆட்சியைப் பிடித்ததோடு இந்தியாவில் தங்கள் மதத்தைப் பரப்புவதற்காகவும் இந்தியமக்களைத் தங்களது கிறித்தவ மதத்திற்கு மதம் மாற்றம் செய்வதற்காகவும் தங்கள் நாட்டுப் பாதிரிமார்களை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தனர். அப்படி வந்தவர்கள்தான்  கால்டுவெல்,  ஜி. யு. போப்,  கான்ஸ்டன்டைன்  ஜோசப்  ...