இடுகைகள்

gnanasambandan tamil ulagam லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நூலகமே கோவில்….

படம்
  ‘ஒரு நூலகம் திறக்கப்படுகிறபோது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன’ என்பது ஆன்றோர் வாக்கு. இது உண்மையா! என்று பலர் யோசிக்கலாம். நான் சந்தித்த ஒரு அனுபவத்தை உங்களுக்குச் சொல்லுகிறேன்.  ஒரு சுதந்திர தினத்தன்று மதுரையில் மத்திய சிறைச்சாலையில் சிறப்பு நிகழ்வுக்காக என்னைப் பட்டிமன்றம் பேச அழைத்திருந்தார்கள். இதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால், சிறையில் இருக்கின்ற சிறைவாசிகளையே பேச்சாளர்களாகப் போட்டுக்கொள்ளலாம் என்று நான் சொன்னபோது அப்போது சிறைக்காப்பாளராக இருந்த அதிகாரி மிக்க மகிழ்ச்சியடைந்து ‘ஐயா நீங்க நடுவரா வாங்க நான் பேச்சிலே ஆர்வமுள்ள ஆறுபேரை தேர்வு பண்ணி வைக்கிறேன்’ என்றார்.  அதேபோல கூட்டம் தொடங்கியது. வரவேற்புரை முடிந்தபிறகு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நான் முன்னுரை சொல்லியபிறகு அதில் கலந்துகொண்டவர்கள் ஒவ்வொருவராகப் பேசத் தொடங்கினார்கள். ஆச்சர்யம் அவர்களைச் சிறைவாசிகள் என்றோ, ஏதோ ஒரு குற்றத்திற்காகத் தண்டனை பெற்று வந்தவர்கள் என்றோ சொல்ல முடியாதபடி அவ்வளவு சிறப்பாகப் பேசினார்கள். அதில் இரண்டுபேர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களையும் பலரும் வியக்கும் வண்ணம் ப...

அஜந்தா ரகசியம்…

படம்
    சென்ற மே மாதத்தில் டில்லி மற்றும் புனே தமிழ்ச்சங்கங்களின் அழைப்பின்பேரில் நானும் என் துணைவியாரும் அங்கு சென்றுவிட்டு புனேயிலிருந்து ஷுரடிக்குப் போய் பாபாவையும் தரிசித்துவிட்டு எனது அன்பிற்குரிய தம்பி மகன் கணினிப் பொறியாளர்  திருமிகு.  ரவி  மற்றும் அவர்கள் குடும்பத்தாரோடு  எல்லோரா,  மற்றும்  அஜந்தா  போன்ற இடங்களுக்குச் சென்று வந்தோம்.                  ‘ சிவகாமியின்  சபதம்’  நாவலை நான் சிறுபிள்ளையாக இருந்தபோது படிக்கத் தொடங்கி, இன்றுவரை படித்து வருகிறேன். அதில் கதாநாயகியாகிய சிவகாமியின் தந்தையான  ஆயனசிற்பி  அஜந்தா ஓவியங்களின் வர்ண ரகசியத்தை அறிந்துகொள்ள அந்த நாவல் முழுவதும் முயற்சிப்பார்.  மகேந்திர  பல்லவன்,  நரசிம்ம  பல்லவன்,  அவர்களின்  தளபதி  பரஞ்சோதியார் ( பிற்காலத்தில்  இவர்தான் 63 நாயன்மார்களில்  ஒருவராகிய  சிறுத்தொண்டர்)  ஆகியோர் மூலமெல்லாம் அந்த ரகசியத்தைத் தெரிந்துகொள்ள மு...

எல்லா உயிரும்…நம் உயிர் தான்…

படம்
                வீட்டில் ஏதாவது ஜீவன்களை வளர்ப்பது இயல்பான விஷயம். அதனைப் பற்றிச் சொல்வதற்கு முன், ஒரு விஷயத்தைச் சொல்கிறேன்.                சின்னப்பையன் ஒருவன் பள்ளிக்கூடத்துக்குப் போயிருந்த சமயத்தில், அவன் ஆசையாக வளர்த்து வந்த மைனா இறந்துவிட்டது. சாயங்காலம் அவன் வீட்டுக்கு வந்ததும், தயங்கியபடி அம்மா அவனிடம் சொன்னாள். அவனோ விளையாடப் போய்விட்டான். விளையாடித் திரும்பியவன் மைனா எங்கே? என்றான். டேய் அப்பவே சொன்னேன். தெரியலையா? அது செத்துப் போச்சு என்றாள் அம்மா.                பையன் உடனே புரண்டு புரண்டு அழுதான்.                அவனைத் தூக்கி நிறுத்தி, ஒரு அடி கொடுத்தாள் அம்மா.                டேய் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் செத்துப் போச்சுன்னு சொன்னேனே… உடனே விளையா...

உன்னையே நீ உணர்வாய்…

படம்
               புராணங்களில் வரும் அனுமன், பீமன், கடோத்கஜன் ஆகியோருக்கு இன்றும் சிறுவர்களிடமும், இளைஞர்களிடமும் தனிமரியாதை உண்டு. இன்றைக்கு சக்திமான் ஸ்பைடர்மேன், ஹீமேன் மாதிரி அக்காலத்தில் அவர்கள் இருந்தனர்.                எல்லா மனிதர்களும் வலிமை உள்ளவர்களே. ஆனால் தன் பலத்தை அறியாததுதான் அவர்களின் குறை!                ஒருமுறை சென்னையில் ஓர் இளைஞர் கைகளால் தொடாமல் தன் பற்களாலேயே தண்ணீர்ப் பானையைத் தூக்கி ஒரு சுற்று சுற்றிக் கீழே வைத்தார்.                கோவையில் ஒருவர் தன் தலைமுடியில் லாரியைக் கட்டி இழுத்துக் கட்டினார்.                சிலருக்கு மட்டும் பற்களும், தலைமுடியும் அவ்வளவு வலிமை வாய்ந்ததாக இருக்கிறதே எப்படி?        ...

பேசும் கலை வளர்ப்போம்…!

படம்
வெளிநாடுகளில் ஆரேட்டிரிக் பேச்சுப் பயிற்சியைக் கூட ஒரு பாடத்திட்டமாக வைத்திருக்கிறார்கள். ‘இதைப் போய்ப் பாடமாக வைக்க வேண்டுமா?’ என்கிறோம். ஆனால், எதை எந்தச் சமயத்தில் யாரிடம்… எப்படிப் பேச வேண்டும் என்பதை இங்கு நாம் கற்றுத் தருகிறோமா? பள்ளிக்கூடமொன்றில் ஒரு கூட்டம். மாவட்ட ஆட்சித்தலைவர் மேடையில் உட்கார்ந்திருந்தார். எட்டாவது வகுப்பு படிக்கிற ஒரு மாணவியை வரவேற்புரை பேசச் சொன்னார்கள். மனப்பாடம் செய்து மேடையேறிய அந்தப் பெண்ணுக்கு பேச்சு மறந்து போய்விட்டது.  ‘மாவட்ட ஆட்சித்தலைவரை நான் பாராட்டி… சீராட்டி… குளிப்பாட்டி…’ என்று தடுமாற்றத்துடன் பேசிக்கொண்டே போக, நெகிழ்ந்து போனார் மாவட்ட ஆட்சித்தலைவர். முன்னாலிருந்த மாணவர்கள் எல்லாம் தாங்க முடியாமல் சிரித்தார்கள். காரணம் பேச்சில் பயிற்சி இல்லாததுதான். செந்தமிழும் நாப்பழக்கம். பேச்சு பழகப்பழகத்தான் வரும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பேச்சுக்கலையை ஒரு பாடமாகக் குறிப்பிட்ட நேரத்தில் சொல்லிக் கொடுத்தால், வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலுமே பயன்படும். என்ன பேசுகிறோம் என்பதைக் காட்டிலும், என்ன பேசக்கூடாது என்பது மிகமிக முக்கியம். யாரைய...

இலக்கியங்கள் என்ன செய்யும்?…

படம்
ஒருநாள் கல்லூரியில் சிறப்புத்தமிழ் படிக்கின்ற மாணவர்களுக்காக வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தேன். ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னிடத்தில் கேட்கலாம் என்று சொன்னேன். யாரும் பேசவில்லை, வகுப்பில் மயான அமைதி நிலவியது.                பிறகு நான் அவர்களை நோக்கிப், பாடம் தொடர்பாக வேண்டாம். பொதுவான சந்தேகங்கள் எதுவானாலும் கேளுங்கள் என்று  சொன்னவுடன், ஒரு மாணவி எழுந்தாள்… “ஐயா, எம்.பி.பி.எஸ் படிக்கும் மாணவர் டாக்டர் ஆகிறான். பொறியியல் படிப்பவர்கள் இன்ஜினியர் ஆகிறார்கள். சட்டம் படிப்பவர்கள் நீதிபதியாக, வழக்கறிஞராக ஆகிறார்கள். தமிழ் படிப்பதால் என்ன லாபம், இலக்கியம் படித்தால் என்ன ஆகலாம்?” என்று அந்தப் பெண் கேட்டவுடன் வகுப்பே கலகலப்பானது. நான் சற்று அதிர்ச்சியடைந்தேன்.                ஏனென்றால் பொதுவாக எந்த வழியும் இல்லாதவர்கள் வேறு வழி இல்லாமல் கடைசி முயற்சியாக இலக்கியத்தில் வந்து சேருவது போலவும், மொழிப் பாடங்கள் படிப்பது பயன் அற்றது போலவும், ஒரு கரு...

புழுங்கலரிசி எந்த நெல்லில் இருந்து உருவாகுது?

படம்
             பச்சரிசி எந்த நெல்லில் இருந்து உருவாகுது ?  புழுங்கலரிசி எந்த நெல்லில் இருந்து உருவாகுது ?  சொல்லுங்க…’                ஒருநாள் வகுப்பில் இதை நான் கேட்டபோது, உட்கார்ந்திருந்த மாணவர்களில் 35 மாணவர்களுக்கு விடை தெரியவில்லை. ‘பச்சரிசி ஒரு மாதிரியான பயிர்’ என்று சொன்னான் ஒரு மாணவன். பலர் சத்தியமாகத் தெரியாது என்று சொல்லிவிட்டார்கள்.                அரிசியை அவித்தால் புழுங்கல், அப்படியே விட்டால் பச்சரிசி என்பது கூடத் தெரியாததற்குக் காரணம் – விவசாயத்திற்கும் இன்றைய மாணவனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.                ஒரு நெல் எப்படி விளைகிறது? நெல்லில் இருக்கிற வகை என்ன? விதை பாவுவது, நாற்று நடுவது, களை எடுப்பது என்று ஏதாவது தெரிய வைத்திருக்கிறோமா? அடிப்படையில் நமது நாடு விவசாய நாடு என்று சொல்கிறோம். ஆனால் நம்முடைய கல்வி...

இராமச்சந்திரன் என்றாலே வெற்றிதான் (டி.ஆர்.இராமச்சந்திரன்)

படம்
              தமிழ்த்திரைப்பட உலகில் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கி, பின்னர் காமெடியன் வேடம், குணச்சித்திர வேடம் எனப் பலவேடங்களில்ஜொலித்தவர்   டி.ஆர்.இராமச்சந்திரன் .   ‘சபாபதி’     படத்தில் காமெடி கலந்த கதாநாயகனாக இவர் அறிமுகமாகிப் பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகக் கதாநாயகனை அப்படியே கண்முன் கொண்டுவந்து திரையில் நிறுத்தினார் டி.ஆர்.இராமச்சந்திரன்.      இதேபோல் ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்த பிற்காலத்தில் லேடி சூப்பர்ஸ்டாராகவும் மிகச்சிறந்த பரதநாட்டியக் கலைஞராகவும் விளங்கிய  வைஜெயந்தி மாலாவுடன்  இவர்  ‘வாழ்க்கை’  படத்தில் கதாநாயகனாக நடித்தார். அப்படமும் பெருவெற்றியைப் பெற்றது.    வழக்கமாகக் கதாநாயகனின் தோழனாக ஒரு காமெடி நடிகர் வருவார். ஆனால்  ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’  என்ற படத்தில் டி.ஆர்.இராமச்சந்திரன் கதாநாயகனாக நடிக்க அவருக்குக் காமெடி நண்பனாக சிவாஜி கணேசன் நடித்திருப்பார் என்பது ஆச்சர்யமான செய்தி. பலபடங்களில் கதாநாயகனாக நடித்த இவர், தனக்கு ஏற்ற நகைச்சுவைக் கதைகளைத் தயாரித்...

எட்டாவது வள்ளல்… எம்.ஜி.ஆர்…

படம்
சில ஆண்டுகளுக்கு முன்பாக நான் இலங்கை சென்றிருந்தபோது   ‘ கண்டி’   என்ற ஊருக்கு அருகில் காரில் சென்று கொண்டிருந்தேன். திடீரென்று அந்த ஓட்டுநர், ‘ஐயா அந்தப் பக்கம் கையெடுத்துக் கும்பிட்டுக்கோங்க’ என்று நெகிழ்வாகக் கூறினார். நானும் கையெடுத்து வணங்கிவிட்டு, ‘அருகில் ஏதேனும் கோவில் இருக்கிறதா?’ என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், ‘இந்த ஊருக்கு அருகில்தான்   புரட்சித்தலைவர்  மக்கள்  திலகம்  திரு. எம். ஜி. ஆர்   அவர்கள் பிறந்த வீடு இருக்கிறது’ என்று சொன்னவுடன் நான் வியந்து போனேன். ஆம்,  மருதூர்  கோபால  மேனன்  ராமச்சந்திரன்  என்று அழைக்கப்படுகின்ற திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் தந்தை கேரளாவிலிருந்து குடும்பத்தோடு இலங்கைக்கு வேலை தேடிச்சென்றபோது அங்குதான் எம்.ஜி.ஆர் பிறந்திருக்கிறார். பின்னர் தந்தையாருடைய மறைவுக்குப் பிறகு, எம்.ஜி.ஆரையும், அவரின் மூத்த சகோதரர் எம்.ஜி.சக்கரபாணியையும் கூட்டிக்கொண்டு தமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு வந்தார் எம்.ஜி.ஆரின் தாயாராகிய  சத்யபாமா  அம்மையார். அங்கு மூன்றாம் வகுப்புவரை எம்.ஜி.ஆரும் அவருடைய சகோத...

திரைவானில் ஒரு சந்திரன்… கே.பாலச்சந்தர்

படம்
தமிழ்த் திரையுலகில் புதிய மாற்றங்களை உருவாக்கிய இயக்குநர் வரிசையில்   டைரக்டர் ஸ்ரீதர்   அவர்களுக்கு எத்தனை பங்குண்டோ அத்தனை பங்கு   இயக்குநர் சிகரம் திரு.கே.பாலச்சந்தர்   அவர்களுக்கும் அவரைத் தொடர்ந்து வந்த   இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கும்   உண்டு. திரு.கே.பாலச்சந்தர் அவர்கள் அரசுப்பணியாளராக வாழ்க்கையைத் தொடங்கியபோதும் அவரிடத்தில் இருந்த நாடகத் தாகம் அவரை நாடக உலகிற்கும் திரையுலகிற்கும் அழைத்து வந்தது. சென்னை ஏ.ஜி. அலுவலகத்தில் (அக்கவுண்டண்ட் ஜெனரல்) பணிபுரிந்தபோது உணவு இடைவேளை நேரத்தில் நாடகத்திற்கான கருவை உருவாக்கி நடிக்க விருப்பமுள்ளவர்களைத் தன் குழுவில் இணைத்துக்கொண்டு ஆங்கில நாடகங்களை, மேடை நாடகங்களாக இயக்கிக்கொண்டிருந்தார் பாலச்சந்தர். அவரது ஆற்றலைக் கேள்விப்பட்ட திரையுலகைச் சார்ந்த திரு.ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் அவரது தயாரிப்பு நிறுவனத்தில் பாலச்சந்தரை இணைத்துக்கொண்டு  எம். ஜி. ஆர்  அவர்கள்  கதாநாயகனாக நடித்த  ‘ தெய்வத்தாய்’  படத்திற்குக் கதை வசனம் எழுத வாய்ப்புக் கொடுத்தார். அந்தப் படம் வெற்றிபெற்ற போதிலும் அதற்குப் பிறகு...