இடுகைகள்

விவேகானந்தர்

படம்
  2003ஆம் ஆண்டு ஜுலை மாதம் அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பான ‘Fetna’ (Federation of Tamil Association of North America) சார்பில் நியூஜெர்சிக்கு அருகில் நடைபெற்ற தமிழ்ச்சங்கக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா செல்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நியூயார்க்,  வா ஷி ங்டன்,  ஃபுளோரிடா,  அட்லாண்டா  போன்ற அமெரிக்க மாகாணங்களில் அமைந்துள்ள தமிழ்ச் சங்கங்களில், பல்வேறு தலைப்புகளில் பேச்சு, கலந்துரையாடல் ஆகியவற்றில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது சிகாகோ நகரில் நம்முடைய விவேகானந்தர் அவர்கள் 1863ஆம் ஆண்டு சர்வசமய மாநாட்டில் பங்கேற்ற சொற்பொழிவு குறித்து நான் பேசினேன். அச்சமயம் அங்கு வந்திருந்த தமிழ் அறிஞர் ஒருவர், சிகாகோவில் விவேகானந்தர் வந்து பேசிய இடத்திற்கு வெளியில் ஒரு கல்வெட்டு இருப்பதாகக் குறிப்பிட்டுச் சொன்னார். அந்தக் கல்வெட்டில் விவேகானந்தரைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது,           ‘A light from the East’ “ கிழக்கிலிருந்து  வந்த  ஒளி”  எனக் குறிப்பதாகப் பெருமிதத்தோடு கூறினார். உண்மைதான். ...

சிலேடை விருந்து

படம்
தமிழ்மொழிக்கு இனிமை தருவன   உவமை, உருவகம், சொல்லடுக்கு, சந்தப்பாக்கள், உயர்வு நவிற்சி, சிலேடை   என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு மொழியும் இவ்வாறு தனக்கெனத் தனிச்சிறப்பைப் பெற்று விளங்கத்தான் செய்யும். தமிழில்  ‘இரட்டுற மொழிதல்’   அல்லது   ‘சிலேடை’  என்பது கேட்டுக் கொண்டிருப்பவர்களை, வாசிப்பவர்களைத் தன் வயப்படுத்தும் தன்மை உடையது எனச் சொல்லலாம். இச்சிலேடை, செம்மொழிச் சிலேடை, பிரிமொழிச் சிலேடை என இருவகைப்படும். இதில் செம்மொழிச் சிலேடை கற்றவர்க்கு மட்டும் எளிதில் விளங்குவது, மற்றது கல்லாதவரும் எளிதில் புரிந்து கொள்ளுமாறு தெளிவாய் அமைவது. ஒருசொல், இருபொருள் தருமாறு வருவதே இரட்டுற மொழிதலாகும். மேடைக்கலையில் வல்லவர்களான  கி.வா.ஜெகந்நாதன், கிருபானந்த வாரியார்  போன்றோருடைய பேச்சில் மிகச் சரளமாகச் சிலேடைச் சொற்கள் புகுந்துவரும். ஒருமுறை கி.வா.ஜெகந்நாதன் அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசுவதற்காகச் சென்னையிலிருந்து கிளம்பி அதிகாலை நேரத்தில் தான் பேசவேண்டிய ஊருக்கு வந்து சேர்ந்தார். ரயில் நிலையத்தில் அவரை வரவேற்க வந்தவர்கள், அழகிய பூமாலை ஒன்றை அவருக்கு அணிவித்...

தமிழகத்தின் முதல் விடுதலைப்பெண் குரல்… வேலு நாச்சியார்

படம்
ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தியபோது நமக்குள் இருந்த ஒற்றுமையைக் குலைப்பதற்காகப் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு நம்மை அவர்கள் வீழ்த்தினர். அதனால்தான் பிற்காலத்தில் மகாகவி பாரதியார்கூட,  ‘ ஆயிரம்   உண்டிங்கு   ஜாதி  –  எனில்   அந்நியர்   வந்து   புகல்   என்ன   நீதி ? –  ஓர்   தாயின்   வயிற்றில்   பிறந்தோர் ,  தம்முள்   சண்டைசெய்   தாலும்   சகோதரர்   அன்றோ ’ என்று நம் நிலை குறித்துப் பாடியுள்ளார். இந்தியாவிலேயே விடுதலைக்கான முதல் வீரக்குரல்  நெற்கட்டான் செவ்வலை  ஆண்ட  பூலித்தேவனுடைய  குரல்  என்றால், அதேபோல அதற்குப்பின் வந்த  தென்னரசியாம்  வீரமங்கை  வேலுநாச்சியும்  வீரக்குரல்  எழுப்பினார்.  ஆங்கிலேயரை எதிர்த்து இழந்த தன்னுடைய சிவகங்கை பகுதியை மீட்டு அரசியானார். தன் கணவரான  முத்து  வடுகநாதரைக்  காளையார்கோவிலில் சூழ்ச்சி செய்து ஆங்கிலேயர்கள் கொன்றதை அறிந்து, அவர்களைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடும், இழந்த தன் நாட்டைமீ...

எட்டாவது வள்ளல்… எம்.ஜி.ஆர்…

படம்
சில ஆண்டுகளுக்கு முன்பாக நான் இலங்கை சென்றிருந்தபோது   ‘ கண்டி’   என்ற ஊருக்கு அருகில் காரில் சென்று கொண்டிருந்தேன். திடீரென்று அந்த ஓட்டுநர், ‘ஐயா அந்தப் பக்கம் கையெடுத்துக் கும்பிட்டுக்கோங்க’ என்று நெகிழ்வாகக் கூறினார். நானும் கையெடுத்து வணங்கிவிட்டு, ‘அருகில் ஏதேனும் கோவில் இருக்கிறதா?’ என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், ‘இந்த ஊருக்கு அருகில்தான்   புரட்சித்தலைவர்  மக்கள்  திலகம்  திரு. எம். ஜி. ஆர்   அவர்கள் பிறந்த வீடு இருக்கிறது’ என்று சொன்னவுடன் நான் வியந்து போனேன். ஆம்,  மருதூர்  கோபால  மேனன்  ராமச்சந்திரன்  என்று அழைக்கப்படுகின்ற திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் தந்தை கேரளாவிலிருந்து குடும்பத்தோடு இலங்கைக்கு வேலை தேடிச்சென்றபோது அங்குதான் எம்.ஜி.ஆர் பிறந்திருக்கிறார். பின்னர் தந்தையாருடைய மறைவுக்குப் பிறகு, எம்.ஜி.ஆரையும், அவரின் மூத்த சகோதரர் எம்.ஜி.சக்கரபாணியையும் கூட்டிக்கொண்டு தமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு வந்தார் எம்.ஜி.ஆரின் தாயாராகிய  சத்யபாமா  அம்மையார். அங்கு மூன்றாம் வகுப்புவரை எம்.ஜி.ஆரும் அவருடைய சகோத...

திரைவானில் ஒரு சந்திரன்… கே.பாலச்சந்தர்

படம்
தமிழ்த் திரையுலகில் புதிய மாற்றங்களை உருவாக்கிய இயக்குநர் வரிசையில்   டைரக்டர் ஸ்ரீதர்   அவர்களுக்கு எத்தனை பங்குண்டோ அத்தனை பங்கு   இயக்குநர் சிகரம் திரு.கே.பாலச்சந்தர்   அவர்களுக்கும் அவரைத் தொடர்ந்து வந்த   இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கும்   உண்டு. திரு.கே.பாலச்சந்தர் அவர்கள் அரசுப்பணியாளராக வாழ்க்கையைத் தொடங்கியபோதும் அவரிடத்தில் இருந்த நாடகத் தாகம் அவரை நாடக உலகிற்கும் திரையுலகிற்கும் அழைத்து வந்தது. சென்னை ஏ.ஜி. அலுவலகத்தில் (அக்கவுண்டண்ட் ஜெனரல்) பணிபுரிந்தபோது உணவு இடைவேளை நேரத்தில் நாடகத்திற்கான கருவை உருவாக்கி நடிக்க விருப்பமுள்ளவர்களைத் தன் குழுவில் இணைத்துக்கொண்டு ஆங்கில நாடகங்களை, மேடை நாடகங்களாக இயக்கிக்கொண்டிருந்தார் பாலச்சந்தர். அவரது ஆற்றலைக் கேள்விப்பட்ட திரையுலகைச் சார்ந்த திரு.ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் அவரது தயாரிப்பு நிறுவனத்தில் பாலச்சந்தரை இணைத்துக்கொண்டு  எம். ஜி. ஆர்  அவர்கள்  கதாநாயகனாக நடித்த  ‘ தெய்வத்தாய்’  படத்திற்குக் கதை வசனம் எழுத வாய்ப்புக் கொடுத்தார். அந்தப் படம் வெற்றிபெற்ற போதிலும் அதற்குப் பிறகு...

சங்க ஜனனி… சாரதா தேவி அம்மையார்

படம்
ஒருமுறை ஒருவர், குருநாதருடைய மனைவியாகிய குருபத்தினியைப் பார்த்து, ‘தாயே! ஆற்றில் பெருவெள்ளம் வரும்போது பெரியபெரியமரங்கள், யானைகள், குதிரைகள், வீடுகள் என அனைத்துப் பொருட்களையும் இழுத்து வருகின்றது. ஆனால் அதே ஆற்றில் வாழும் சிறு மீன் அத்தனை வேகம் கொண்ட அந்தத் தண்ணீரையும் எதிர்த்து செல்கிறதே, எப்படி?’ என்று ஒரு கேள்வியைக் கேட்டாராம். அதற்கு அந்த அம்மையாரும் புன்னகையோடு, ‘மகனே! ஆற்றுநீரில் அடித்துக்கொண்டு வரப்படும் மரங்கள், யானை, குதிரை போன்றவற்றைத் தூக்கிக் கரையில் விட்டாலும் அவை பிழைத்துக்கொள்ளும். ஆனால் மீன்கள் கரைக்கு வந்தால் சற்று நேரத்தில் துடிதுடித்து மாய்ந்து போகும். ஆறுதான் தனக்கு உயிர், வாழ்க்கை என்று அந்த மீன்கள் ஆற்றை நம்புகின்றன. தன்னையே உயிராக நம்பியிருக்கின்ற மீன்களைச் செல்லப்பிள்ளைகளாகக் கருதி, எதிர்ஏறிச் செல்ல ஆறு அனுமதிக்கிறது. இதைப்போலத்தான் இறைவனே கதியென்று இருப்பவர்களை இறைவன் எங்கும் ஏற்றிவிடுவான், உயர்த்திக்காட்டுவான், அவர்களின் உயர்வுக்குக் காரணமாவான்’ என்று சொன்னாராம் அந்த அம்மையார். அப்படிச் சொன்னவர்தான்  குருதேவர்  என்றழைக்கப்படுகின்ற  இராமகிரு ஷ் ண...

புதுவை தந்த பூபாளம்… எழுத்தாளர் பிரபஞ்சன்

படம்
தமிழில், உரைநடையும் சிறுகதையும் தோன்றியபிறகு, இதழ்களின் வளர்ச்சி அதிகரிக்கத் தொடங்கின.   மணிக்கொடி,  எழுத்து,  ழா,  தீபம்   போன்ற இலக்கியஇதழ்கள்ஒருபுறமும்,   ஆனந்த  விகடன்,  கல்கி,  குமுதம்  போன்ற வெகுஜனப் பத்திரிக்கைகள் ஒருபுறமும், சிற்றிதழ்கள் ஒருபுறமும் சிறுகதை உலகின் வளர்ச்சிக்குப் பெரும் துணை நின்றன. எழுத்தாளர்  கல்கி,  சாண்டில்யன்,  தேவன்,  ரா. கி. ரங்கராஜன்  போன்றவர்கள் சிறுகதைகளில் தங்கள் எழுத்துத் திறமையை வெளிப்படுத்திக்கொண்டிருந்த அதேநேரத்தில்  புதுமைப்பித்தன்,  கு. அழகிரிசாமி,  ஜெயகாந்தன்  போன்றவர்களும் தங்களுக்கெனத் தனிப்பார்வையோடும், இடதுசாரிச் சிந்தனையோடும் எளிய மக்களின் உலகத்தைத் தங்கள் எழுத்துக்களில் படைத்துக் காட்டினர். இந்நிலையில்தான்  சாவி ( சா. விஸ்வநாதன் ) போன்ற பத்திரிக்கையாளர்கள் புதிய எழுத்தாளர் பட்டாளத்தைத் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தத் தொடங்கினர். (திரையுலகில் ஸ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா போல) எழுத்தாளர்  சுஜாதா,  மாலன்,  சுப்பிரமணிய...