இடுகைகள்

புலவர் பாட்டுக்கு உரைஎழுதிய உழவர்

படம்
                         தமிழ் இலக்கிய வரலாற்றில் அரிய பணிகள் செய்திருந்தும்கூட, அவர்கள் அறியப்படாத அறிஞர்களாகவே வாழ்ந்து மறைந்திருப்பது வருந்தத்தக்க செய்தியாகும்.   சோழவந்தானூர்  அரசஞ்சண்முகனார்   போன்ற அறிஞர்களின் தமிழ்ப்பணியை இந்த உலகம் அறிந்துகொள்ள வேண்டுமென்பதற்காகத்தான், என் தந்தையார்   புலவர்   கு. குருநாதன்   அவர்கள்   ‘ சோழவந்தானூர்  அரசஞ்சண்முகனாரின்  தமிழ்ப்பணி’   என்ற தலைப்பில் என்னை மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர்ப்பட்ட ஆய்வினை (பி.ஹெச்.டி) மேற்கொள்ளப் பணித்தார். நானும் அவ்வாறே பல்லாண்டுக்காலம் (1983 – 1989, ஆறாண்டுகள்) அவரது மறக்கப்பட்ட நூல்களைத் தேடி ஆய்வுசெய்து முனைவர்ப்பட்டமும் பெற்று தற்போது   காவ்யா  பதிப்பகத்தில்   நூலாகவும் வெளியிட்டுள்ளேன்.                இதேபோன்று எனது மேற்பார்வையில் முனைவர்ப்பட்ட ஆய்வினை மேற்கொண்ட எனது மாணவ, மாணவியருக்கும் கூடியமட்டும...

வரலாற்றுத் தொலைநோக்கி… தி.வை. சதாசிவப் பண்டாரத்தார்

படம்
நான் அயல்நாடுகளுக்குச் செல்லுகிறபோதெல்லாம் அங்குள்ள பல்கலைக்கழகங்கள், அருங்காட்சியகங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் இவற்றையெல்லாம் பார்த்து அவற்றுக்கான காலப்பின்னணியைக் கேட்டுத் தெரிந்து கொள்வேன். அமெரிக்காவுக்கு முதன்முதலில் பயணப்பட்டபோது (2003ஆம் ஆண்டு) அங்கு அவர்கள் சுற்றிக்காட்டிய பழமையான கட்டிடங்கள் எல்லாம் ஐநூறு ஆண்டுகளுக்கு உட்பட்டவையாகவே இருந்தன. அப்போது நான், ‘எங்கள்  தமிழ்நாட்டுக்கு வாருங்கள், ஈராயிரம் ஆண்டுப் பழமையுடைய கோயில்களும், கட்டிடங்களும் எவ்வளவோ உண்டு’ என்று பெருமையாகச் சொல்லுவேன். பள்ளியில் நான் படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே சரித்திரக் கதைகள் மீது எனக்கு அளவற்ற விருப்பம் உண்டு. அதிலும் குறிப்பாகப்  பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன்  போன்ற வரலாற்று நாவல்களை எழுதிய  எழுத்தாளர் கல்கி  அவர்களுடைய எழுத்தைப் படிப்பதென்றால், எனக்கு நேரங்காலம் போவது தெரியாது. கல்கியைத் தொடர்ந்து  சாண்டில்யன், ஜெகசிற்பியன், நா.பார்;த்தசாரதி, அகிலன்  ஆகியோரின் வரலாற்றுப் படைப்புகளும் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றில...

புத்தாண்டு வாழ்த்துகள்… மார்கழியின் பெருமை

படம்
  ‘மாதங்களில் நான் மார்கழியாய் இருக்கிறேன்’   என்பது பகவத்கீதையில் கண்ணபெருமான் சொன்ன வார்த்தை.                 ‘ காலங்களில்  அவள்  வசந்தம்                 கலைகளிலே  அவள்  ஓவியம்’ என்று சொன்ன  கவியரசு  கண்ணதாசனும்,                 ‘ மாதங்களில்  அவள்  மார்கழி                 மலர்களிலே  அவள்  மல்லிகை’ என்று மார்கழி மாதத்தைப் பாராட்டுகின்றார். அப்படி என்ன அந்த மார்கழியின் சிறப்பு என்று யோசித்துப் பார்த்தேன். இந்த மார்கழி மாதத்தில்தான் சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வணங்கும் சைவப் பெருமக்களுக்குரிய  ‘ திருஆதிரை’ த் திருநாள் வருகிறது. திருமாலை மட்டும் போற்றி வணங்கும் வைணவ அடியார்களுக்குரிய  ‘ வைகுண்ட  ஏகாதசி ’த் திருநாளும் இம...

சுதந்திரப் போராட்டத்தில் முருகப்பெருமான்

படம்
  அது சுதந்திரப்போராட்டக் காலம். நாட்டு விடுதலைக்காகத் தலைவர்களும், இளைஞர்களும், பெண்களும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். அச்சமயத்தில் நாடகக் கலைஞர்களும், திரைக் கலைஞர்களும் தங்களுக்குரிய பங்கை ஆங்கிலேய எதிர்ப்பைத் தாங்கள் கற்ற கலைகள் மூலமாக வெளிப்படுத்தி வந்தனர். ஒரு சமயம்  சங்கரதாஸ்  சுவாமிகள்  எழுதிய  ‘ வள்ளி  திருமணம்’  நாடகம் மேடையில் நடந்து கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் இறைபக்தியோடும், தேசபக்தியோடும் அந்நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது முருகன் வேடமிட்ட நடிகர் நாடகத்திற்குரிய புராணப் பாடல்களோடு ஆங்கிலேய எதிர்ப்புப் பாடல்களையும் பாடத் தொடங்கினார். இதை எதிர்பார்த்துக் காத்திருந்த போலீஸ் அதிகாரிகள் மேடையிலேயே அவரைக் கைது செய்வதற்கு வந்தார்கள். உடனே அவர் சற்றும் தயங்காது, ‘பரமசிவன் மகனைப் பழனி ஆண்டியாகிய முருகப்பெருமானையா கைதுசெய்யப் போகிறீர்கள்?’ என்று கேட்டவுடன் அதிகாரிகள் தயங்கி நின்றனர். மக்களும் ஆவேசமாக எழுந்து கோபக்குரல் எழுப்பினர். உடனே போலீஸ் அதிகாரிகள் நாடகக் கொட்டைகைக்கு வெளிப்புறம் வந்து காத்திருந்தனர். நாடகம்...

இரு பாவைகள்… ஓர் பார்வை…

படம்
  ‘ பாவை’   என்ற சொல், பழமையை, பெண்களை, பார்வை ஒளியைக் குறிக்கும் சொல்லாகும். பாவை விளக்குகளைக் கோயில் சிற்பங்களில் காண்கிறோம். ‘ என்  கண்ணின்  பாவையன்றோ’  என பாரதி பாடல் அமைகிறது.  ‘ பாவை  நோன்பு’  என்பது தமிழகத்தில் பெண்களுக்கேயுரிய பழமையான வழிபாட்டு முறை. சங்க இலக்கியங்களில், பரிபாடலில்  ‘ பாவை  வழிபாடு’  பற்றிய செய்தி கூறப்படுகிறது. தைப்பாவை என்று கண்ணதாசன் தை மாதத்தைப் பெண்ணாகப் பாவித்துப் பாடியுள்ளார். பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவராகிய 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாள், மார்கழி மாதத்தில் பெண்கள் பாவை நோன்பு நோற்க வேண்டிய அவசியத்தை 30 பாடல்களில் பாடி, அதற்குத்  ‘ திருப்பாவை’  எனப் பெயரிட்டுள்ளார். வைணவ மதத்தின் கடவுளான திருமாலை அடைவதற்கு இப்பாவை நோன்பு கன்னியர்க்குப் பயன்படும் என்பது ஆண்டாளின் கருத்து. இதேபோன்று சைவசமயக் குரவர்களில் ஒருவராகிய மாணிக்கவாசகர் தன்னைப் பெண்ணாகப் பாவித்து, சிவபெருமானை அடைவதற்குப் பெண்கள் பாவை நோன்பு இருக்கவேண்டும் என 20பாடல்கள் பாடி அதற்குத்  ‘ திருவெம்பாவை’  எனப் பெயரிட்டார். பத்...

ஜி.யூ.போப்

படம்
  சமயப்பணி செய்ய இந்தியாவுக்கு, குறிப்பாகத் தமிழகத்துக்கு வந்த அயல்நாட்டுக் கிறிஸ்தவப் பாதிரிமார்கள் பலரும் தமிழ்மொழியைக் கற்று, அதன் அருமையை உணர்ந்து சமயப் பணியோடு, தமிழ்ப் பணியையும் சிறப்பாகச் செய்தனர். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை எழுதிய  கால்டுவெல் , தமிழில் உரைநடையை அறிமுகம் செய்து  தேம்பாவணி  என்ற நூலை எழுதிய  வீரமாமுனிவர்.   ரேனீஸ் ஐயர்  இவர்களோடு நினைக்கத்தக்க தமிழ்ப்பணியைத் தமிழுக்குச் செய்து 42 ஆண்டுகள் தமிழகத்திலேயே வாழ்ந்தவர்  ஜி.யூ.போப்  என்று அழைக்கப்படுகின்ற  ஜார்ஜ் யூக்ளோ போப்  ஆவார். ஜி.யூ.போப் 1820ஆம் ஆண்டு  பிரின்ஸ்  எட்வர்ட்  தீவில்  பிறந்தார். இவருடைய தாய் தந்தையார் பெயர்  ஜான்  போப் –  கேதரின்  யூக்ளோ  என்பதாகும்.  ஜி.யூ.போப்பின் உடன் பிறந்தவர்கள் பத்துப் பேர்களாவர். இவர் தமது 6ஆவது வயதில் தம் தாய் தந்தையரோடு இங்கிலாந்துக்கு அழைத்து வரப்பட்டார். சமயக்கல்வி அதிகம் போதிக்கப்பட்டது. சிறுவயதிலேயே கடவுளுக்குத் தொண்டு செய்யவேண்டும். சமயப்பணி ஆற்றவேண்டும் என்று விர...