இடுகைகள்

பம்மல் முதல் கோமல் வரை

படம்
தமிழ்த் திரையுலகில், இலக்கிய உலகில், எழுத்துலகில் என்று சுடர்விட்டவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்;. அவர்களில் ஒருவர்தான்  திரு. கோமல்  சுவாமிநாதன் . ஒரு திரைப்படம் ஒரு சிறுகதை, ஒரு மேடைப்பேச்சு, ஒரு கவிதை, ஒரு நாவல் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா? என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள். ஏற்படுத்தும். சான்றாகத்,  ‘ தண்ணீர்  தண்ணீர்’  என்ற படம் நாடக எழுத்தாளர் திரு. கோமல் சுவாமிநாதன் அவர்களால் எழுதப்பட்டுப் பன்முறை மேடைநாடகமாக வெற்றிபெற்ற பெருமையை உடையது. அந்த நாடகத்தை அப்படியே வாங்கி, திரைக்கதை மட்டும் எழுதி, வசனத்தைக் கோமல் அவர்களை எழுதவைத்துத் தேசிய விருது பெறும் படமாக மாற்றிக் காட்டினார்  இயக்குநர்  சிகரம்  கே. பாலச்சந்தர்  அவர்கள். இந்தப் படத்தில் ஒரு ஊரே தேர்தலில் வாக்களிக்க மறுத்தால் அரசாங்கமே அவர்களை நோக்கி வரும் என்பதைப் படத்தில் மிகச் சிறப்பான காட்சியாக வைத்திருப்பார்கள். அதுமட்டுமல்லாமல் எல்லாத் தேவைகளுக்கும் அரசாங்கத்தை எதிர்பார்த்து நிற்காமல் நமக்கு நாமே என்பதை மனதில்கொண்டு ஊர் கூடித் தேர் இழுத்தால் தண்ணீர் ஏரியே ஊருக்குள் வரும் எ...

டிஸ்கோ…1982…

படம்
உலகத்திலேயே எனக்குப் பிடிக்காத விஷயங்கள் இரண்டு. ஒன்று  எண்ணெய் தேய்த்துக் குளிப்பது. அடுத்தது முடிவெட்டுவது, அதாவது வெட்டிக்கொள்வது. குறிப்பாக முடிவெட்டிக்கொள்வதென்றால் மரண பயம்தான். இதற்குக் காரணம் சொல்ல வேண்டுமென்றால் சில பூர்வ புண்ணியக் கதைகளை நீங்கள் தெரிந்துதான் ஆகவேண்டும். சிறுவயதில் நான் முடிவெட்டிக் கொள்ளத் தனியாகச் செல்லக்கூடாது. உலகமே மாறினாலும் என் அப்பா கம்பீரமாக உடன் வந்தே தீருவார்.  எங்களுக்கு முடிவெட்ட ஒரு ஆஸ்தான முடித்திருத்தாளர் இருந்தார். அவரைத் தவிர யாரிடமும் நான் முடிவெட்டக்கூடாது. பெரும்பாலும் அவர் எங்கள் வீட்டிற்கே வந்துவிடுவார். ‘சாமி கிராப் வெட்டி விடட்டுமா?’ என்று அன்பாகக் கேட்டபடி எனக்கு முடிவெட்டத் தொடங்குவார், என் அப்பாவின் முன்னால். அந்த முறையை நினைத்தால் உடம்பே நடுங்கும். எல்லா முடிகளையும் ஒன்றாக்கி ஒரு கையில் கொத்தாகப் பிடித்து மறுகையில் கத்தரியால் வெட்டிச் சாய்ப்பார். பின் மண்டையில் மிஷின் ஒன்றால் ஒரு தேய்… தேய்ப்பார். முடிந்தது, அப்போது பார்த்தால் அநேகமாக ஏதாவது ஒரு ஆதினத்தின் இளைய சந்நிதானம் போல இருப்பேன். ஒரே கோபமும், அழுகையுமாய் வரும், ஒன்ற...

பள்ளிப்பருவத்திலே…

படம்
          அன்று உலகமே சந்தோசத்தில் ஆழ்ந்திருக்கச், சூரியன் கிழக்கே உதிக்க, எங்கள் வீட்டில் எல்லோரும் அவசரமாகக் காரியங்களில் ஈடுபட, நான் காலையில் எழுப்பப்பட்டேன், குளுப்பாட்டப்பட்டேன். வெளுத்த உடைகள் எனக்கு அணிவிக்கப்பட்டன. கழுத்தில் மாலை போடாத ஆடுமாதிரி நான் முழிக்க என்னைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றார்கள். அநேகமாக இழுத்துச் சென்றார்கள்.           பள்ளிக்கூட வாசலில் ஒரு சிறுவனை யாரோ அடிக்க அவன் ‘குய்யோ முறையோ’ என்று அலறிக்கொண்டிருந்தான். எனக்கு அப்போதே காய்ச்சல் வந்தது. அது ஒரு கிறிஸ்தவப் பள்ளி. ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்டிருப்பதைப் பார்த்தவுடன் எனக்கு உயிரே போய்விட்டது.                யாரோ ஒழுங்காகப் பள்ளிக்கு வராத பையன் என்று நினைத்தேன். என்கூட வந்த ஒருவனும் அதை ஆமோதித்தான். அப்போது எனக்கு வயது ஆறு.                என் அப்பா என்னை விட்டுவிட்டு ‘ஒழுங்கா இரு, பள்ளிக்கூடம் விட்டதும்தான் வரணும்’ என்று...

நாங்கள் போட்ட நாடகங்கள் – பகுதி 2

படம்
                சகுனி வேடம் போட்ட நான் வஞ்சமாகச் சிரிக்கும்போதெல்லாம்  மூக்கிற்குள் ஒட்டு மீசை போக… அதை நான் தாயம் போடுவதற்கு வைத்திருந்த சிறுகட்டையால் சமாளித்தேன். (சகுனி தாயக் கட்டையோடு இருக்கக் காரணம் இதுதான்)  துரியோதனன் அடிக்கடி என்னிடம் வந்து …. ‘ மாமா  நான்  என்ன  செய்யட்டும்  மாமா….  என்ன  செய்யட்டும்’  என்று புலம்புவார். நாடகத்தைப் பார்த்த பலர் உருகிப் போனார்கள். எனக்குத்தான் உண்மை தெரியும். அவர் வசனத்தை மறந்த போதெல்லாம் பேசுகிற ஒரே வசனம் ‘மாமா… நான் என்ன செய்யட்டும் மாமா… என்ன செய்யட்டும்’ என்பதுதான்.                பாஞ்சாலி துயிலை உரியும்  ‘ சீனுக்காக’  மாணவர்கள் ஆவலாகக் காத்திருக்க நாங்கள் அதைப் புதுமுறையில் திரைபோட்டு மறைத்துக் காண்பித்தோம். கோபத்தில் மாணவர்கள் பெஞ்சுகளை உடைக்க,                கடைசியில் சபதக் காட்சி…     ...

நாங்கள் போட்ட நாடகங்கள்…

படம்
               ‘உன் நடிப்பெல்லாம் எங்கிட்ட வேணாம்’                ‘அவன் பெரிய நடிகன்யா’                ‘இந்த நடிப்புத்தானே வேணாங்கிறது’                ‘எங்கிட்ட அப்பிடி நடிச்சு ஏமாத்திட்டாண்டா’ என்று பலரும் பலமுறை பலரைப் பற்றிச் சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தச் சொற்கள் உண்மையான நடிகரைப் பற்றியோ, அவரது நடிப்பைப் பற்றியோ சொல்லப்படுவன அல்ல. வாழ்க்கையில் நடிக்கும் மனிதர்களைப் பற்றியே…                நான் எங்க;ரில் எங்கள் வயதில் நாடகம் போட முயற்சித்ததையும், அதில் பட்ட சிரமங்களையும் உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.                எங்கள் ஊரின் மறுகரையில் இருந்த அக்கிரகாரத்துக் கிருஷ்ணன் கோவிலில் திருவிழா...

எலி வேட்டை

படம்
                யானைக்கொரு காலம் வந்தால்                 பூனைக்  கொரு  காலம்  வரும்” இது பழமொழி. புதுமொழி சொல்ல வேண்டுமென்றால்,                 ‘ புலிக்குப்  பயந்த  காலம்  போய்                  எலிக்குப்  பயந்த  காலமாகி  விட்டது’  எனக் கூறலாம்.                அப்படி என்ன எலிகளுக்குப் பலம் வந்து விட்டது என நினைக்கிறீர்களா? எலியால் விளைந்த துயரையும், அதனால் விளைந்த பலனையும் உங்களுக்குக் கூறட்டுமா?                அப்போது நாங்கள் கிராமத்தில் இருந்தோம். மிகப்பெரிய பழைய வீடு. பெரும்பாலும் பகலில்கூட, கீழே படுத்திருப்பவரை மிதித்துக் கொண்டு போகும்பட...

கிராமத்து இராத்திரிகள்

படம்
நான் சொல்லப்போவது நாற்பத்தி ஐந்து வருடங்களுக்கு முன் நடந்தது. அப்போது எனக்குப் பத்து வயது. எங்க அப்பாவுக்கு கிராமத்திற்கு மாற்றலாகி, அந்தப் பெரிய தெருவிற்கு அப்போதுதான் குடி வந்திருந்தோம்.                தெருப்பையன்கள் எல்லோரும் என்னை ஒரு வினோதப் பொருளாகப் பார்த்தார்கள். பக்கத்திலேயே பள்ளிக்கூடம். நான் முதன்முதலாக அப்பள்ளிக்கூடம் போனபோது மீசை தாடி, நீண்ட முடியோடு ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். யாரோ சாமியார் என்று நினைத்தேன். அவர்தான் தலைமை ஆசிரியர். என்னைப் பார்த்ததும்….                “ஏண்டா நேத்து வர்லே? மண்டிக்கால் போடு” சொல்லிவிட்டு அமைதியாக இருந்தார்.                எனக்குப் பயத்தில் தொண்டை அடைத்தது. முழங்கால் போட்டேன்.                ‘இவன் இன்னிக்குத்தான் சார் சேர்ந்திருக்கான்’ ஒருவன் கத்தினான். ஹும் சர...