இடுகைகள்

நகைச்சுவை என்னும் சாவி…

படம்
திரையுலகில் புதுமுகங்களை அறிமுகம் செய்த இயக்குநர்கள் என்று பார்க்கும்போது இயக்குநர்  ஸ்ரீதர்,  கே. பாலச்சந்தர்,  பாரதிராஜா,  இவர்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இதுபோல எழுத்துலகில் புதியவர்களைத், தான் பணியாற்றிய பத்திரிக்கையில் அறிமுகப்படுத்தியதோடு அவர்களுக்குப் பெரும் புகழையும்வாங்கித்தந்தவர்  எழுத்தாளர்  பத்திரிக்கையாளர்   சா. விசுவநாதன்  என்ற  சாவி   அவர்கள்தான். நகைச்சுவையாக எழுதுவதில் வல்லவர்களான  கல்கி,  புதுமைப்பித்தன்,  தேவன்  இவர்களையடுத்துச் சாவி அவர்களையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். இவரது மேடைப்பேச்சும் மிகுந்த நகைச்சுவையாய் இருக்கும். புரட்சித்தலைவர்  எம். ஜி. ஆர்,  சரோஜாதேவி  அவர்கள் நடித்து ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த  ‘ அன்பே  வா’  படம் நூறுநாட்கள் ஓடி வெற்றிகண்டது. அந்தப் படத்தினுடைய வெற்றிவிழாவில் திரு.சாவி அவர்கள் பேசும்போது, ‘இந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்குக் காரணம் இந்தப் படத்தைத் தயாரித்த ஏ.வி.எம்.நிறுவனம்தான் என்று நினைப்பீர்கள். இல்லை’ என்றவுடன் மேடையில் இர...

கே.எம்.முன்ஷியின் ஜெய் சோம்நாத்….

படம்
      இந்தியா ஒரு பண்டைய தேசம் என்பதும், அறிஞர்களும் ஞானிகளும் நிறைந்த தேசம் இதுவென்பதும் உலகோர் ஏற்றுக்கொண்ட உண்மை. இதை மகாகவி பாரதி தன்னுடைய பாடலிலே சொல்லும்போது                ஞானத்திலே பர மோனத்திலே – உயர்                மானத்திலே அன்ன தானத்திலே              கானத்திலே அமுதாக நிறைந்த                கவிதையிலே உயர்நாடு……… என்று கூறுவார்.                தென்னாடாகிய தமிழகத்திற்கு மூவாயிரம் ஆண்டு இலக்கிய வரலாறு உண்டு. இதேபோன்று வடஇந்தியாவிலும் வேதகால நாகரீகம் தொடங்கி, இதிகாசங்களைத்  தோ ற்றுவித்த  வால்மீகி,  வியாசர்,  காளிதாசர்,  பாரவி   போன்ற படைப்பாளப் பெருமக்களை கொண்ட வரலாறு அங்கும் உண்டு.                இன்றைக்கும்கூட  வி. ச. காண்டேகரை,  சரத்ச...

பகீரதனும்… கங்கையும்…

படம்
மனித வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குத் தேவை  முயற்சி,  விடாமுயற்சி,  இடைவிடா  முயற்சி.  இந்த மூன்றையும் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு முன்னேற வேண்டும். முயற்சி  செய்தவர்களுக்கெல்லாம் வெற்றி கிடைத்துவிடுமா? என்று ஒரு கேள்வியைச் சிலர் கேட்பார்கள். இதற்குத் திருவள்ளுவர் விடைசொல்லும்போது                 தெய்வத்தான்  ஆகா  தெனினும்  முயற்சிதன்                 மெய்வருத்தக்  கூலி  தரும். இறைவனின் அருள் இல்லாவிட்டாலும்கூட, ஒருவருடைய முயற்சி அந்த முயற்சிக்கு ஏற்ற பலனைக் கொடுக்கும். அது தெய்வத்தால் கூட முடியாததாக இருக்கலாம். ஆனால் முயற்சி செய்தால் எவரும் வெற்றிபெறலாம். இதற்கு ஆதாரமாகப் புராணத்தில் சொல்லப்படுகின்ற  பகீரதனுடைய  கதையைச் சான்றாகக் காணலாம். தம் முன்னோர்களின் சாபத்தைப் போக்குவதற்காக ஆகாயத்தில் ஓடுகின்ற கங்கைநதியை (பாகீரதி) பூமிக்குக் கொண்டுவரும் முயற்சியாகச் சிவபெருமானை நோக்க...

மனக்கவலை மாற்றலாம்…

படம்
                ‘ சிரிப்பு  அதன்  சிறப்பைச்  சீர்; தூக்கிப்  பார்ப்பதே  நமது  பொறுப்பு’                                                                                                                           -மருதகாசி      கலைவாணர் என்.எஸ்.கிரு ஷ் ணன்  அவர்கள்  டி.ஏ.மதுரத்தோடு  இணைந்து சிரிப்புப் பொங்கப் பொங்கப் பாடிய பாட்டு சிரிப்புப் பாட்டு.  ‘ராஜாராணி’  என்ற இந்தத் திரைப்படம் வந்து 60 ஆண்டுகள் சென்றுவிட்டாலும் நம்மை மயக்கும் அந்தக் குரல்கள், பாடல் வரிகள்.                மனிதன் மகிழ்ச்சியை அனுபவிக்கப் பிறந்...

சிரிப்பும்…. சிறப்பும்…

படம்
                  “உலகின் முதல் பெண்மணி யார்?”                “ஏவாள்… சார்”                “அவளோட சிறப்பும் பெருமையும் எது?”                “கடவுளால் படைக்கப்பட்டது சிறப்பு சார்”                “பெருமை?”                “அவளுக்கு மாமியார் கிடையாது சார்”                ஒரு வகுப்பறையில் நடைபெற்ற உரையாடல் இது.                ‘இராமன் காடு சென்றபோது சீதையும் உடன் சென்றாளே…. ஏன் தெரியுமா?’              ...

அகராதியின் தந்தை… வீரமாமுனிவர்…

படம்
பழைமையும் பெருமையும் மிக்க இந்தியப் பெருநாட்டின் செல்வவளத்தை, இயற்கை வளத்தைக் கேள்வியுற்ற போர்ச்சுக்கீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், ஆர்மீனியர்கள் போன்றோர் இந்நாட்டுக்கு முதலில் வியாபாரம் செய்யத்தான் வந்தனர். வந்த இடத்தில், இந்தியாவின் ஒற்றுமையின்மையைக் கண்டபின்பு, அவர்களெல்லாம் தங்களது துப்பாக்கி, பீரங்கி பலத்தால் இந்தியாவின் பல பகுதிகளை ஆளத் தொடங்கினார்கள். இப்போட்டியில் வென்றவர்கள் ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும்தான். (வந்தவாசி என்ற இடத்தில் நடந்த போர்தான் இந்த அதிகாரப் போட்டியைத் தீர்மானித்தது) பிரெஞ்சுக்காரர்கள் பாண்டிச்சேரி, காரைக்கால், கோவா, ஆகிய பகுதிகளைக் கைப்பற்ற, இந்தியா முழுமையும் ஆங்கிலேயரின் ஆளுகைக்குக் கீழ் வந்தது. ஆங்கிலேயர்கள் இந்தியாவில் ஆட்சியைப் பிடித்ததோடு இந்தியாவில் தங்கள் மதத்தைப் பரப்புவதற்காகவும் இந்தியமக்களைத் தங்களது கிறித்தவ மதத்திற்கு மதம் மாற்றம் செய்வதற்காகவும் தங்கள் நாட்டுப் பாதிரிமார்களை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தனர். அப்படி வந்தவர்கள்தான்  கால்டுவெல்,  ஜி. யு. போப்,  கான்ஸ்டன்டைன்  ஜோசப்  ...

கந்தர்வ(ன்) கானம்…

படம்
நாளும்  கிழமையும்  நலிந்தோர்க்கு  இல்லை ஞாயிற்றுக்கிழமையும்  பெண்களுக்கு  இல்லை                                                                                                                                                                         – கந்தர்வன் தமிழ் இலக்கிய வரலாற்றில் புதுக்கவிதை எனும் புதிய காற்று  ‘ வானம்பாடி’  இயக்கமாகத் தமிழகத்தில் மெல்ல வீசத் தொடங்கியது. அதை தோற்றுவித்த பெருமக்கள் என்று பட்டியலிட்டால்  அப்துல்  ரகுமான்,  புவிஅரசு,  ஈரோடு  தமிழன்பன்  கங்கை  கொண்டான்,  சிற்பி, ...