இடுகைகள்

என் வழி தனி வழி….

படம்
        நம் நாட்டில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், எதனையும் ஆச்சரியத்தோடு பார்ப்பது. நம்புவது, அதனை மற்றவர் ஆச்சரியப்படும்படி சொல்வது. நான் சொல்வதுகூட உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.     ஒருவர் சோதிடம் பார்க்க விரும்பினார். தன் குடும்ப ஜாதகத்தை எடுத்துக்கொண்டு சோதிடரிடம் சென்றார். சோதிடரிடம் கொடுத்துவிட்டு முன்னால் அமர்ந்தார்.                சோதிடர் ஆரம்பித்தார். ‘உங்கள் வீட்டு எண் 7ஆம் நம்பரா?’                வந்தவர் ஆச்சரியத்தோடு “ஆமாம் ஐயா”                ‘கூடப்பிறந்தவர்கள் 5 பேர். பெண் 2, ஆண் 3, மூத்தவன் பெயர் மாணிக்கம். கடைசிப்பெண் பெயர் சீதாலட்சுமி….’ கடகடவென சொல்லிக்கொண்டே போனார்.                ‘சாமி நீங்க தெய்வந்தான் எப்படி இவ்வளவு துல்லியாமாச் சொல்றீங்க?’     ...

அறிவே ஆயுதம்…

படம்
  ‘ எடுத்த  காரியம்  யாவினும்  வெற்றி’  – நம்முடைய  மகாகவி  பாரதியின்  உற்சாகமான பாடல் வரி. படிக்கும்போதே நமக்கு உற்சாகத்தையும், மன எழுச்சியையும் உண்டாக்குகிறது.       எல்லாக் காரியங்களிலும் எல்லோராலும் வெற்றிபெற முடியுமா?  அப்படியானால் ஓட்டப்பந்தயங்களில் சிலர் மட்டுமே வெற்றிக்கோப்பையைப் பெறுகிறார்களே! மற்றவர்கள் தோல்வியடைகிறார்களே இதற்குக் காரணம் என்ன?                 முல்லா  நஸ்ருதீன்  ஒருமுறை தன் வீரப்பிரதாபங்களை அள்ளிவிட்டுக் கொண்டிருந்தார்.                ‘ஒருதடவை நான் என் எதிரிகளை ஓட வைத்தேன் தெரியுமா?’                ‘அப்படியா, எப்படி முல்லா இதைச் செய்தீர்கள்?’ – ஒருவன் ஆர்வத்தோடு கேட்டான்.        ‘அவர்களைப் பார்த்தவுடன் நான் ஓட ஆரம்பித்தேன். அவர்களும் என்னை விரட்டிக்கொண்டு ஓடி வந...

நகைச்சுவை என்னும் சாவி…

படம்
திரையுலகில் புதுமுகங்களை அறிமுகம் செய்த இயக்குநர்கள் என்று பார்க்கும்போது இயக்குநர்  ஸ்ரீதர்,  கே. பாலச்சந்தர்,  பாரதிராஜா,  இவர்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இதுபோல எழுத்துலகில் புதியவர்களைத், தான் பணியாற்றிய பத்திரிக்கையில் அறிமுகப்படுத்தியதோடு அவர்களுக்குப் பெரும் புகழையும்வாங்கித்தந்தவர்  எழுத்தாளர்  பத்திரிக்கையாளர்   சா. விசுவநாதன்  என்ற  சாவி   அவர்கள்தான். நகைச்சுவையாக எழுதுவதில் வல்லவர்களான  கல்கி,  புதுமைப்பித்தன்,  தேவன்  இவர்களையடுத்துச் சாவி அவர்களையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். இவரது மேடைப்பேச்சும் மிகுந்த நகைச்சுவையாய் இருக்கும். புரட்சித்தலைவர்  எம். ஜி. ஆர்,  சரோஜாதேவி  அவர்கள் நடித்து ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த  ‘ அன்பே  வா’  படம் நூறுநாட்கள் ஓடி வெற்றிகண்டது. அந்தப் படத்தினுடைய வெற்றிவிழாவில் திரு.சாவி அவர்கள் பேசும்போது, ‘இந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்குக் காரணம் இந்தப் படத்தைத் தயாரித்த ஏ.வி.எம்.நிறுவனம்தான் என்று நினைப்பீர்கள். இல்லை’ என்றவுடன் மேடையில் இர...

கே.எம்.முன்ஷியின் ஜெய் சோம்நாத்….

படம்
      இந்தியா ஒரு பண்டைய தேசம் என்பதும், அறிஞர்களும் ஞானிகளும் நிறைந்த தேசம் இதுவென்பதும் உலகோர் ஏற்றுக்கொண்ட உண்மை. இதை மகாகவி பாரதி தன்னுடைய பாடலிலே சொல்லும்போது                ஞானத்திலே பர மோனத்திலே – உயர்                மானத்திலே அன்ன தானத்திலே              கானத்திலே அமுதாக நிறைந்த                கவிதையிலே உயர்நாடு……… என்று கூறுவார்.                தென்னாடாகிய தமிழகத்திற்கு மூவாயிரம் ஆண்டு இலக்கிய வரலாறு உண்டு. இதேபோன்று வடஇந்தியாவிலும் வேதகால நாகரீகம் தொடங்கி, இதிகாசங்களைத்  தோ ற்றுவித்த  வால்மீகி,  வியாசர்,  காளிதாசர்,  பாரவி   போன்ற படைப்பாளப் பெருமக்களை கொண்ட வரலாறு அங்கும் உண்டு.                இன்றைக்கும்கூட  வி. ச. காண்டேகரை,  சரத்ச...

பகீரதனும்… கங்கையும்…

படம்
மனித வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குத் தேவை  முயற்சி,  விடாமுயற்சி,  இடைவிடா  முயற்சி.  இந்த மூன்றையும் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு முன்னேற வேண்டும். முயற்சி  செய்தவர்களுக்கெல்லாம் வெற்றி கிடைத்துவிடுமா? என்று ஒரு கேள்வியைச் சிலர் கேட்பார்கள். இதற்குத் திருவள்ளுவர் விடைசொல்லும்போது                 தெய்வத்தான்  ஆகா  தெனினும்  முயற்சிதன்                 மெய்வருத்தக்  கூலி  தரும். இறைவனின் அருள் இல்லாவிட்டாலும்கூட, ஒருவருடைய முயற்சி அந்த முயற்சிக்கு ஏற்ற பலனைக் கொடுக்கும். அது தெய்வத்தால் கூட முடியாததாக இருக்கலாம். ஆனால் முயற்சி செய்தால் எவரும் வெற்றிபெறலாம். இதற்கு ஆதாரமாகப் புராணத்தில் சொல்லப்படுகின்ற  பகீரதனுடைய  கதையைச் சான்றாகக் காணலாம். தம் முன்னோர்களின் சாபத்தைப் போக்குவதற்காக ஆகாயத்தில் ஓடுகின்ற கங்கைநதியை (பாகீரதி) பூமிக்குக் கொண்டுவரும் முயற்சியாகச் சிவபெருமானை நோக்க...

மனக்கவலை மாற்றலாம்…

படம்
                ‘ சிரிப்பு  அதன்  சிறப்பைச்  சீர்; தூக்கிப்  பார்ப்பதே  நமது  பொறுப்பு’                                                                                                                           -மருதகாசி      கலைவாணர் என்.எஸ்.கிரு ஷ் ணன்  அவர்கள்  டி.ஏ.மதுரத்தோடு  இணைந்து சிரிப்புப் பொங்கப் பொங்கப் பாடிய பாட்டு சிரிப்புப் பாட்டு.  ‘ராஜாராணி’  என்ற இந்தத் திரைப்படம் வந்து 60 ஆண்டுகள் சென்றுவிட்டாலும் நம்மை மயக்கும் அந்தக் குரல்கள், பாடல் வரிகள்.                மனிதன் மகிழ்ச்சியை அனுபவிக்கப் பிறந்...

சிரிப்பும்…. சிறப்பும்…

படம்
                  “உலகின் முதல் பெண்மணி யார்?”                “ஏவாள்… சார்”                “அவளோட சிறப்பும் பெருமையும் எது?”                “கடவுளால் படைக்கப்பட்டது சிறப்பு சார்”                “பெருமை?”                “அவளுக்கு மாமியார் கிடையாது சார்”                ஒரு வகுப்பறையில் நடைபெற்ற உரையாடல் இது.                ‘இராமன் காடு சென்றபோது சீதையும் உடன் சென்றாளே…. ஏன் தெரியுமா?’              ...