நாட்டுக்கு உழைப்போம்…
தம்பி நீ காலை எத்தனை மணிக்கு எழப்போகிறாய்?’ அவனுடைய சகோதரி ஒருநாள் இரவு கேட்டாள். ‘எப்போதும்போல ஆறு மணிக்கு…. ஏன்?’ என்றான் தம்பி. ‘எழுந்து?’ ‘இதென்ன கேள்வி நிலக்கடலை விவசாயம் இருக்கிறது…. வியாபாரம் இருக்கிறது இரண்டையும் கவனிப்பேன்’. ‘சரி, நீ தினமும் காலையில் ஆறுமணிக்கு எழுந்தால் கடலை வியாபாரி. 4மணிக்கு அதாவது இரண்டு மணிநேரம் முன்னதாக எழுந்தால் ஜனாதிபதியாகக்கூட ஆகலாம். முயற்சி செய்’ என்றாள் சகோதரி. தன் மனதில், எப்போதும் இருக்கும் ஜனாதிபதி எண்ணத்திற்கு வண்ணம் பூசியது அந்த வார்த்தைகளே! பிறகு அந்தச் சிறுவன் ஒருபோதும் ஆறுமணிவர...