இடுகைகள்

வையாபுரிப்பிள்ளையின் தமிழ்ப்பணி….

படம்
தமிழ் இலக்கிய உலகில் அச்சுக்கலையின் வருகைக்குப்பிறகு, ஏடுகளைப் பதிப்பித்தபெருமை  சி. வை. தாமோதரம்  பிள்ளை,  தமிழ்த்தாத்தா  உ. வே. சாமிநாத  ஐயர்,  பின்னத்தூர்  நாராயணசாமிஐயர்  போன்றோருடைய பணி குறிப்பிடத்தக்கது. இவர்களை அடுத்த நிலையில் காண்கிறபோது பதிப்பாசிரியராகத், தமிழ், மலையாள சொற்களஞ்சியங்களை உருவாக்கியவராக இலக்கியங்களின், அது எழுதிய புலவர்களின் காலங்களைக் கணித்த பெருமை  திரு. வையாபுரிப்பிள்ளை  அவர்களுக்கே உண்டு. தமிழகத்தின் தென்கோடியில் பிறந்த இவர் திருவனந்தபுரத்திலும் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் ஆற்றிய தமிழ்ப்பணிக்கு ஈடுஇணை இல்லை. இலக்கியங்களின் காலத்தை இவர் நிர்ணயித்ததில் முரண்பாடுகள் உண்டு என  மொழிஞாயிறு  தேவநேயப்  பாவாணர்  போன்றவர்கள் மாற்றுக் கருத்தும் தெரிவித்தனர். எவ்வாறு இருப்பினும் வையாபுரிப் பிள்ளை அவர்களினுடைய கூர்த்த அறிவும், நுண்மாண் நுழைபுலத்தோடு கூடிய ஆராய்ச்சி முயற்சியும் அனைவராலும் போற்றத்தகுந்த ஒன்று. இத்தகைய பெருமைமிகுந்த தமிழுக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட வையாபுரிப்பிள்ளை அவர்களைப் பற்றிய விரி...

நாட்டுக்கு உழைப்போம்…

படம்
            தம்பி நீ காலை எத்தனை மணிக்கு எழப்போகிறாய்?’ அவனுடைய சகோதரி ஒருநாள் இரவு கேட்டாள்.                ‘எப்போதும்போல ஆறு மணிக்கு…. ஏன்?’ என்றான் தம்பி.                ‘எழுந்து?’                ‘இதென்ன கேள்வி நிலக்கடலை விவசாயம் இருக்கிறது…. வியாபாரம் இருக்கிறது இரண்டையும் கவனிப்பேன்’.                ‘சரி, நீ  தினமும் காலையில் ஆறுமணிக்கு எழுந்தால் கடலை வியாபாரி. 4மணிக்கு அதாவது இரண்டு மணிநேரம் முன்னதாக எழுந்தால் ஜனாதிபதியாகக்கூட ஆகலாம். முயற்சி செய்’ என்றாள் சகோதரி.                தன் மனதில், எப்போதும் இருக்கும் ஜனாதிபதி எண்ணத்திற்கு வண்ணம் பூசியது அந்த வார்த்தைகளே! பிறகு அந்தச் சிறுவன் ஒருபோதும் ஆறுமணிவர...

முத்தமிழ் வித்தகர்… கொத்தமங்கலம் சுப்பு

படம்
தமிழ்த்திரையுலகில் நடிகராகக், கவிஞராக, எழுத்தாளராக, ‘ஒளவையார்’ என்ற படத்தை இயக்கிய பெருமையுடையவராகத் திகழ்ந்தவர்தான் பல்துறைக் கலைஞரான  கொத்தமங்கலம்  சுப்பு  அவர்கள்.  தில்லானா  மோகனாம்பாள்,  ராவ்  பகதுர்  சிங்காரம்,  பந்தநல்லூர்  பாமா,  போன்ற புதினங்களை ‘ஆனந்தவிகடன்’ வார இதழில் எழுதியவர். மிகச்சிறந்த கவிஞர், மிகச்சிறந்த நகைச்சுவையாளர் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இதற்கான சான்றினை ஒரு பதச்சோறாகக் காண்போம்… கிராமத்தில் நிலத்தை உழுதுகொண்டிருக்கின்ற விவசாயிக்கு அவன் மனைவி கஞ்சி கொண்டு செல்கிறாள். உழுது முடித்து வந்தவன் கலையத்திலிருக்கும் கஞ்சியை ஒரு வாய் குடிக்கிறான். உடனே அவன் மனைவி, ‘மச்சான் கொஞ்சம் இரு’ என்று சொல்லிவிட்டு, தன் முந்தானையில் முடிந்து வைத்திருந்த உப்பினை அந்தக் கஞ்சியில் போட்டுக் கரைத்து அவனுக்குக் கொடுக்கிறாள். அந்தக் கஞ்சியை ரசித்து, ருசித்துக் குடித்த அந்த விவசாயி, ‘ஆஹா! இந்தக் கஞ்சியில் போட்டு ருசியோடு குடிப்பதற்காகத்தான் கடலிலே உப்பை இந்தக் கடவுள் உருவாக்கித் தந்திருக்கிறான்’ என்று சொல்லிவிட்டு அதைப் பாட்டாகப் பா...

குருவே வழிகாட்டி…. வாழ்வின் ஒளிகாட்டி…

படம்
                    கற்றது  கைம்மண்  அளவு…..  கல்லாதது  உலகளவு…’                இது பழங்காலத்தில் நம்முடைய ஒளவைப் பாட்டி சொன்ன வார்த்தை.                ‘அப்ப எவ்வளவு நாள் படிக்கிறது?’                ‘இதுல சந்தேகம் என்ன?’                ‘அதுக்கப்புறம் படிக்க வேண்டாமா?’                இப்படிப் பலபேர் பேசுவதை நாம் கேட்டிருக்கிறோம். பார்த்திருக்கிறோம். ஒரு நண்பர் இன்னொரு நண்பரிடம் பெருமையாகச் சொன்னார். ‘எம் பையன் ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிட்டான்!’                ‘அடடே அப்படியா? அப்புறம் என்ன செய்யப்...

மனிதக் கணினி செய்குத்தம்பி பாவலர்…

படம்
'அவதானம்’  என்பது ஒரே நேரத்தில் பல செயல்களை  ‘ அவதானித்தல்’  எனப் பொருள்படும். எட்டுவேலைகளை ஒரே நேரத்தில் செய்கின்ற ஆற்றலுடையவரை  ‘ அ ஷ் டாவதானி’  என்றும், பத்து வேலைகளைச் செய்பவரை  ‘ தசாவதானி’  என்றும், பதினாறு வேலைகளை ஒரேநேரத்தில் செய்பவரை  ‘ சோட ஷ   அவதானி’  என்றும் அழைப்பது வழக்கம். இந்த  ‘ அவதானி’  என்ற வடசொல்லுக்குத் தமிழில்  ‘ கவனகர்’  என்று பொருள். இதேபோல, நூறு வேலைகளை ஒரேநேரத்தில் செய்பவர்களை  ‘ சதாவதானி’  என அழைப்பார்கள். அத்தகைய சதாவதானிகளில் ஒருவர்தான் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த  சதாவதானி  செய்குத்தம்பி  பாவலர் . இவர் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்யும் ஆற்றலைப் பெற்றதோடு ஏக சந்தக் கிராதியாகவும் திகழ்ந்தார்.  ‘ ஏக  சந்தக்  கிராதி’  என்ற வடசொல்லுக்குப் பொருள் ஒருமுறை ஒரு சொல்லைச் சொன்னால் அதனை அப்படியே உள்வாங்கிக்கொண்டு திரும்பச் சொல்லுகிற திறமை. அத்திறமை உள்ளவர்களை  ‘ ஏக  சந்தக்  கிராதி’  என அழைப்பது வழக்கம். சதாவதானி செய்குத்தம்பி பா...

குரங்கும்… குழந்தையும்…

படம்
                    ஒரு ஊருக்கு ராமாயணக் கதையைக்  ‘ கதா  காலட்சேபம்’  செய்ய ஒரு முதியவர் வந்திருந்தார்.        ஊர்ப்பெரியவர்கள் அவரை வரவேற்று மகிழ்ந்தார்கள். கதை சொல்பவர் ஆர்வத்தோடு கேட்டார். ‘பெரியோர்களே, இராமனின் கதையை, ராமாயணத்தை உங்கள் ஊரில் காலட்சேபம் செய்ய வந்துள்ளேன்…. சம்மதம்தானே!’                ‘சந்தோஷம்…. சம்மதம்…’ என்றார்கள் ஊர்ப்பெரியவர்கள்.                ‘ஒருமாதம் முழுவதும் சொல்லட்டுமா?’                ‘ஒரு மாதமா…’இழுத்தபடி கேட்டார்கள் ஊரார்.                ‘சரி 15 நாட்கள் கதை சொல்லவா?’               ...

என் வழி தனி வழி….

படம்
        நம் நாட்டில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், எதனையும் ஆச்சரியத்தோடு பார்ப்பது. நம்புவது, அதனை மற்றவர் ஆச்சரியப்படும்படி சொல்வது. நான் சொல்வதுகூட உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.     ஒருவர் சோதிடம் பார்க்க விரும்பினார். தன் குடும்ப ஜாதகத்தை எடுத்துக்கொண்டு சோதிடரிடம் சென்றார். சோதிடரிடம் கொடுத்துவிட்டு முன்னால் அமர்ந்தார்.                சோதிடர் ஆரம்பித்தார். ‘உங்கள் வீட்டு எண் 7ஆம் நம்பரா?’                வந்தவர் ஆச்சரியத்தோடு “ஆமாம் ஐயா”                ‘கூடப்பிறந்தவர்கள் 5 பேர். பெண் 2, ஆண் 3, மூத்தவன் பெயர் மாணிக்கம். கடைசிப்பெண் பெயர் சீதாலட்சுமி….’ கடகடவென சொல்லிக்கொண்டே போனார்.                ‘சாமி நீங்க தெய்வந்தான் எப்படி இவ்வளவு துல்லியாமாச் சொல்றீங்க?’     ...