இடுகைகள்

மீனுக்கும் ஆயுள் கம்மி…

படம்
                ஒவ்வொரு பயணமும் ஒரு புதிய அனுபவத்தையும், மகிழ்ச்சியையும் நமக்கு வழங்கும். சிறுபிள்ளைகளாக இருக்கும்போது, எங்காவது சுற்றுலா செல்கிறோம் என்று சொன்னால் இரவெல்லாம் தூங்கமாட்டோம். பஸ்ஸிலோ, ரயிலிலோ ஜன்னலோரத்தில் உட்கார்ந்துகொண்டு ஓடிக்கொண்டிருக்கின்ற மரங்களை, எதிர்த்துச் செல்லும் வாகனங்களை, கூடவே வரும் நிலாவை, மேகத்தை ரசித்து மகிழ்வது எப்போதும் எல்லோருக்கும் பிடிக்கும்.            திருவனந்தபுரத்திலிருந்து செங்கோட்டை வரும் வழியில்  ‘ புனலூர்’  என்ற ஊருள்ளது. அந்த ஊர் தமிழ்ச்சங்கத்திற்கு ஒருமுறை நான் பேசப் போயிருந்தேன். கூட்டம் முடிந்ததும் நண்பர்கள் அந்த ஊரிலிருந்த ஓர் உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார்கள். மிகப்பெரிய ஆறு. ஆற்றினையொட்டிய மலைமீது சாலை, மலைச்சரிவில் வீடுகளும் கட்டிடங்களும் அதில் அந்த உணவு விடுதி அமைந்திருந்தது.                மழை எப்போது வரும். எப்போது நிற்கும் என்று சொல்லமுடியாதபடி வந்து வந்து போய்க்கொண்டிருந்தது. நா...

வென்றார்கள்…. தந்தார்கள்….

படம்
          பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் எவையாக இருந்தாலும் வகுப்பறைகள் சிறப்படையத் தேவை – நல்ல ஆசிரியர், சிறந்த மாணவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பாடத்திட்டம். இவை சரியாக அமைந்தால் அத்தகைய கல்விக்கூடங்கள் சிந்தனைக் கூடங்களாக மாறும்.                எனக்கொரு ஆசிரியர் இருந்தார், அவர் பாடவேளை முடியும் மட்டும் பாடம் நடத்தமாட்டார். ஒரு அரைமணி நேரம் நடத்திவிட்டுக் கேள்விகள் கேட்கச் சொல்லுவார் அல்லது வகுப்பு மாணவர்களை இரண்டு அணிகளாக்கி ஒரு அணி மற்றொரு அணியைக் கேள்வி கேட்கவும் பதில் சொல்லவும் தூண்டுவார். சிலநேரங்களில், தான் சிந்தித்ததைக் கேள்வியாக மாணவர்களிடத்திலே கேட்டுவிட்டுக், கடைசியில் அவரே விடையும் சொல்லுவார்.                ஒருமுறை எங்களுக்குத் திருக்குறள் நடத்திவிட்டுப் பொதுவாக ஒரு கேள்வி கேட்டார். ‘எங்க யாராவது சொல்லுங்க பார்க்கலாம். உடம்பு, உயிர் இந்த ரெண்டுல உடம்ப வளர்க்கறதுக்குச் சாப்பாடு சாப்பிடுகிறோம். தண்ணி குடிக்கிறோம் அது ...

ஏட்டில் இருந்ததை நாட்டுக்குத் தந்தவர்… உ.வே.சா…

படம்
             என்னுடைய வாழ்க்கையில் பல ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்கும்போது, ‘உங்களுக்குப் பிடித்தப் புத்தகம் எது? யாருடைய எழுத்தை மீண்டும் மீண்டும் படிப்பீர்கள்?’ என்று கேட்கப்படும் கேள்விக்கு நான் சொல்கின்ற பதில் உ.வே.சாமிநாத ஐயர் அவர்களுடைய  ‘ என்  சரித்திரம்’  என்ற புத்தகம்தான் என்று குறிப்பிடுவேன். ஒரு மகிழ்ச்சி என்னவென்றால் என்னுடைய பிறந்த தினம் 1955 அக்டோபர் 19. சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர் உ.வே.சா. அதிலும் குறிப்பாக 1855 பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி அவர் உத்தமதானபுரம் என்ற ஊரில் வேங்கடராமன் என்பவரின் மகனாகப் பிறக்கிறார். இந்த மகிழ்ச்சியை நான் நெகிழ்ச்சியோடு பல நிகழ்ச்சிகளில் சொல்லுவேன்.               அவருடைய வரலாற்றைப் படிக்கத் தொடங்கும் அனைவருக்கும் நான் சொல்லுவது இதுதான். எழுத்துநடை எவ்வளவு எளிமையாக இனிமையாக இருக்கவேண்டும் என்பதற்கு உ.வே.சா. அவர்களின் ‘என் சரித்திரமே ஒரு சான்று.            உ.வே.சா. தம் ஆசிரியராகிய மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்க...

தமிழ்வேந்தர்…துணைவேந்தர்… வ.அய்.சுப்பிரமணியம்

படம்
தஞ்சை மண்ணின் புகழுக்கு நஞ்சை வயல்கள் மட்டும் காரணமல்ல, கொஞ்சு தமிழும்தான் காரணமாக இருக்கவேண்டுமென்று அன்றைய  தமிழக  முதல்வர்  புரட்சித்தலைவர்  எம். ஜி. ஆர்.  அவர்கள் தமிழுக்கென ஒரு பல்கலைக்கழகத்தை 1981ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி தொடங்கி வைத்தார். கரந்தைத்தமிழ்ச்சங்கத்தைஉருவாக்கிய   உமாமகேஸ்வரனார்,   வேங்கடசாமி நாட்டார்  போன்றோர்களின் கனவு தமிழுக்கெனத் தனிப்பல்கலைக்கழகம் அமையவேண்டும் என்பது. அக்கனவு நனவானது. இத்தகைய பெருமைமிகுந்த பல்கலைக்கழகத்திற்குத் தகுதியும், தமிழாய்ந்த பெருமகனுமாகிய ஒருவர்தான் துணைவேந்தராய் நியமிக்கப்படவேண்டுமென்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் நினைத்தார். இத்தமிழ்ப் பல்லைக்கழகம் தொடங்கப்பட்டபோது புதிய வளாகத்தில் தொடங்கப்படவில்லை. சரபோஜி மன்னர்களின் அரண்மனையின் ஒரு பகுதியில்தான் பல்கலைக்கழகமும், நூலுகக் கட்டிடங்களும் இயங்கத் தொடங்கின. பல்கலைக்கழகம் கட்டுவதற்கு எவ்வளவு இடம் வேண்டுமென எம்.ஜி.ஆர் அவர்கள் அதிகாரிகளை அழைத்துக் கேட்டபோது அவர்கள் நூறு ஏக்கர் இடம் வேண்டும் என்று கேட்டதாகவும், எம்.ஜி.ஆர் அவர்கள...

வையாபுரிப்பிள்ளையின் தமிழ்ப்பணி….

படம்
தமிழ் இலக்கிய உலகில் அச்சுக்கலையின் வருகைக்குப்பிறகு, ஏடுகளைப் பதிப்பித்தபெருமை  சி. வை. தாமோதரம்  பிள்ளை,  தமிழ்த்தாத்தா  உ. வே. சாமிநாத  ஐயர்,  பின்னத்தூர்  நாராயணசாமிஐயர்  போன்றோருடைய பணி குறிப்பிடத்தக்கது. இவர்களை அடுத்த நிலையில் காண்கிறபோது பதிப்பாசிரியராகத், தமிழ், மலையாள சொற்களஞ்சியங்களை உருவாக்கியவராக இலக்கியங்களின், அது எழுதிய புலவர்களின் காலங்களைக் கணித்த பெருமை  திரு. வையாபுரிப்பிள்ளை  அவர்களுக்கே உண்டு. தமிழகத்தின் தென்கோடியில் பிறந்த இவர் திருவனந்தபுரத்திலும் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் ஆற்றிய தமிழ்ப்பணிக்கு ஈடுஇணை இல்லை. இலக்கியங்களின் காலத்தை இவர் நிர்ணயித்ததில் முரண்பாடுகள் உண்டு என  மொழிஞாயிறு  தேவநேயப்  பாவாணர்  போன்றவர்கள் மாற்றுக் கருத்தும் தெரிவித்தனர். எவ்வாறு இருப்பினும் வையாபுரிப் பிள்ளை அவர்களினுடைய கூர்த்த அறிவும், நுண்மாண் நுழைபுலத்தோடு கூடிய ஆராய்ச்சி முயற்சியும் அனைவராலும் போற்றத்தகுந்த ஒன்று. இத்தகைய பெருமைமிகுந்த தமிழுக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட வையாபுரிப்பிள்ளை அவர்களைப் பற்றிய விரி...

நாட்டுக்கு உழைப்போம்…

படம்
            தம்பி நீ காலை எத்தனை மணிக்கு எழப்போகிறாய்?’ அவனுடைய சகோதரி ஒருநாள் இரவு கேட்டாள்.                ‘எப்போதும்போல ஆறு மணிக்கு…. ஏன்?’ என்றான் தம்பி.                ‘எழுந்து?’                ‘இதென்ன கேள்வி நிலக்கடலை விவசாயம் இருக்கிறது…. வியாபாரம் இருக்கிறது இரண்டையும் கவனிப்பேன்’.                ‘சரி, நீ  தினமும் காலையில் ஆறுமணிக்கு எழுந்தால் கடலை வியாபாரி. 4மணிக்கு அதாவது இரண்டு மணிநேரம் முன்னதாக எழுந்தால் ஜனாதிபதியாகக்கூட ஆகலாம். முயற்சி செய்’ என்றாள் சகோதரி.                தன் மனதில், எப்போதும் இருக்கும் ஜனாதிபதி எண்ணத்திற்கு வண்ணம் பூசியது அந்த வார்த்தைகளே! பிறகு அந்தச் சிறுவன் ஒருபோதும் ஆறுமணிவர...

முத்தமிழ் வித்தகர்… கொத்தமங்கலம் சுப்பு

படம்
தமிழ்த்திரையுலகில் நடிகராகக், கவிஞராக, எழுத்தாளராக, ‘ஒளவையார்’ என்ற படத்தை இயக்கிய பெருமையுடையவராகத் திகழ்ந்தவர்தான் பல்துறைக் கலைஞரான  கொத்தமங்கலம்  சுப்பு  அவர்கள்.  தில்லானா  மோகனாம்பாள்,  ராவ்  பகதுர்  சிங்காரம்,  பந்தநல்லூர்  பாமா,  போன்ற புதினங்களை ‘ஆனந்தவிகடன்’ வார இதழில் எழுதியவர். மிகச்சிறந்த கவிஞர், மிகச்சிறந்த நகைச்சுவையாளர் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இதற்கான சான்றினை ஒரு பதச்சோறாகக் காண்போம்… கிராமத்தில் நிலத்தை உழுதுகொண்டிருக்கின்ற விவசாயிக்கு அவன் மனைவி கஞ்சி கொண்டு செல்கிறாள். உழுது முடித்து வந்தவன் கலையத்திலிருக்கும் கஞ்சியை ஒரு வாய் குடிக்கிறான். உடனே அவன் மனைவி, ‘மச்சான் கொஞ்சம் இரு’ என்று சொல்லிவிட்டு, தன் முந்தானையில் முடிந்து வைத்திருந்த உப்பினை அந்தக் கஞ்சியில் போட்டுக் கரைத்து அவனுக்குக் கொடுக்கிறாள். அந்தக் கஞ்சியை ரசித்து, ருசித்துக் குடித்த அந்த விவசாயி, ‘ஆஹா! இந்தக் கஞ்சியில் போட்டு ருசியோடு குடிப்பதற்காகத்தான் கடலிலே உப்பை இந்தக் கடவுள் உருவாக்கித் தந்திருக்கிறான்’ என்று சொல்லிவிட்டு அதைப் பாட்டாகப் பா...