இடுகைகள்

மாமதுரை போற்றுவோம்…

படம்
          மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்ட நாளாகிய இன்று மதுரையைப் பற்றி கொஞ்சம் யோசிப்போமே….                “மதுர மதுரன்னு பெருமை பேசுறாங்களே…. அப்படி என்ன மதுரையில் இருக்கு?” என்று வகுப்பறையில் மாணவர் ஒருவர் எழுந்து கேள்விகேட்டார். அவர் கோவைப் பகுதியிலிருந்து முதுகலை படிக்க வந்தவர். ‘மாமதுரை போற்றுவோம்’ என்று மதுரையில் 3 நாட்கள் நடந்த விழாவின் பெருமைகளைப் பேசியபோதுதான் அம்மாணவர் அப்படிக் கேட்டார்.                இதற்கு நான் பதில் சொல்வதற்கு முன்பாக, ‘எங்க மதுரையில் பழமையான வைகை ஆறு இருக்கு’ என ஒரு மாணவரும்,                ‘ரெண்டாயிரம் வருசத்துக்கு முந்திய தமிழுக்கு முச்சங்கம் வச்சது எங்க மதுரதான் தெரியுமா?’ என்று ஒரு மாணவியும் சொல்ல,                 “ பாண்டியர்  குதிரை  குள...

வல்லமை தாராயோ…!

படம்
              வாழ்க்கை என்பது மிகுந்த ஓட்டத்தில் இருக்கிறது. நேற்றைக்கு வந்ததை இன்றைக்குப் பழையது என்கிறோம்.                முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஒரு திரையரங்கம் இருக்கும். அதற்கு நடந்துபோய்த் திரைப்படம் பார்ப்போம். போகிற வழியில் குடும்பமே மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டு போகும். திரும்ப வரும்போது, பார்த்த திரைப்படம் குறித்தோ அல்லது வேறு விஷயங்களைப் பற்றியோ பேசிக்கொண்டு வருவோம். உறங்கும் வரைக்கும் பேசிக்கொண்டிருப்போம். உறங்கி எழுந்தவுடன் பேசுவோம். இதெல்லாம் இப்போது இல்லை.                சமீபத்தில் எனது சொந்த ஊருக்கு அருகிலிருந்தத் திரையரங்கினை இடித்து விட்டார்கள். எனக்குக் கண்கள் கலங்கி விட்டன. அது ஏதோ நம்முடன் இருக்கும் உறவு போலத் தெரிந்தது. காரணம் என்னவென்றால் பழசு என்பது நன்றாக இருக்கும்.                உலகில் பழையதாகாதது என்று கடவுள், உறவு...

மதுரைத் தலங்களும் தேவாரமும்

படம்
                           ஒருமுறை முதுகலை வகுப்பில் திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பதிகங்களுக்குப் பொருள் கூறிப் பாடம் நடத்திக் கொண்டிருந்தேன்.                அப்போது ஒரு மாணவர் எழுந்து ‘ஐயா, திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலம் ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது ஏழாம்நூற்றாண்டு என்று கூறினீர்கள். 1400 ஆண்டுகளுக்கு முன்பு அவர் வாழ்ந்ததற்கானச் சான்றாதாரங்கள் ஏதாவது உண்டா?” எனக் கேட்டார். எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.                ‘தம்பி நல்ல கேள்வி கேட்டாய். அவர் வாழ்ந்தார் என்பதற்குப் பல சான்றாதாரங்கள் உண்டு.                அவர் செய்த அருஞ்செயல்கள்                நிகழ்த்திய சாதனைகள்           ...

ஆப்பிரிக்க நாட்டில் உயிர்நீத்த அதிசயச் சிறுமி…

படம்
ஆங்கிலேயர்கள் துப்பாக்கியை உன்னை நோக்கி குறிவைத்தபோது உனக்குப் பயம் ஏற்படவில்லையா?’ என்று அவர் கேட்க, அதற்கு அந்தப் பதினைந்து வயதுச் சிறுமி, ‘இல்லை, பயம் இல்லை, அவன் சுட்டாலும் என் உயிர் நாட்டுக்காகத்தான் போகப்போகிறது அதை நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன்’ என்று நோயுற்று மரணத்தருவாயில் இருந்த அவள் சொன்னாள். என் தேசம் விரைவில் சுதந்திரம் அடையும் என்று மகிழ்ந்தார் அந்தப் பெரியவர். இவ்வாறு அந்தச் சிறுமியிடம் பேசியவர்தான்  மோகன்தாஸ்  கரம்சந்த்  காந்தி.   அவருக்குப் பெருமையோடும் உரிமையோடும் பதிலளித்த அந்தச் சிறுமிதான் தமிழகத்தின் கடற்கரை நகரமான தில்லையாடி பகுதியைச் சார்ந்த  வள்ளியம்மை. ஆம், தில்லையாடி வள்ளியம்மையின் மரணத்தருவாயில் காந்தியடிகளோடு பேசுகிற வாய்ப்பையும் அந்தச் சிறுமிக்காகத் தேசப்பிதா கண்கலங்கியதும் தென்னாப்பிரிக்காவில் ஜோகன்ஸ்பெர்க் நகரில்தான் நடந்தவை. இந்த உரையாடலுக்குப்பின் அந்தச் சிறுமி சிலநாட்களில் மரணமடைந்து விட்டார். இந்நிகழ்ச்சி நடந்த ஆண்டு 1914. அதன்பின்னர் 33ஆண்டுகள் கழித்துதான் 1947இல் நாம் சுதந்திரம் பெற்றோம். தமிழக மண்ணில் பூலித்தேவன் தொடங்க...

மீனுக்கும் ஆயுள் கம்மி…

படம்
                ஒவ்வொரு பயணமும் ஒரு புதிய அனுபவத்தையும், மகிழ்ச்சியையும் நமக்கு வழங்கும். சிறுபிள்ளைகளாக இருக்கும்போது, எங்காவது சுற்றுலா செல்கிறோம் என்று சொன்னால் இரவெல்லாம் தூங்கமாட்டோம். பஸ்ஸிலோ, ரயிலிலோ ஜன்னலோரத்தில் உட்கார்ந்துகொண்டு ஓடிக்கொண்டிருக்கின்ற மரங்களை, எதிர்த்துச் செல்லும் வாகனங்களை, கூடவே வரும் நிலாவை, மேகத்தை ரசித்து மகிழ்வது எப்போதும் எல்லோருக்கும் பிடிக்கும்.            திருவனந்தபுரத்திலிருந்து செங்கோட்டை வரும் வழியில்  ‘ புனலூர்’  என்ற ஊருள்ளது. அந்த ஊர் தமிழ்ச்சங்கத்திற்கு ஒருமுறை நான் பேசப் போயிருந்தேன். கூட்டம் முடிந்ததும் நண்பர்கள் அந்த ஊரிலிருந்த ஓர் உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார்கள். மிகப்பெரிய ஆறு. ஆற்றினையொட்டிய மலைமீது சாலை, மலைச்சரிவில் வீடுகளும் கட்டிடங்களும் அதில் அந்த உணவு விடுதி அமைந்திருந்தது.                மழை எப்போது வரும். எப்போது நிற்கும் என்று சொல்லமுடியாதபடி வந்து வந்து போய்க்கொண்டிருந்தது. நா...

வென்றார்கள்…. தந்தார்கள்….

படம்
          பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் எவையாக இருந்தாலும் வகுப்பறைகள் சிறப்படையத் தேவை – நல்ல ஆசிரியர், சிறந்த மாணவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பாடத்திட்டம். இவை சரியாக அமைந்தால் அத்தகைய கல்விக்கூடங்கள் சிந்தனைக் கூடங்களாக மாறும்.                எனக்கொரு ஆசிரியர் இருந்தார், அவர் பாடவேளை முடியும் மட்டும் பாடம் நடத்தமாட்டார். ஒரு அரைமணி நேரம் நடத்திவிட்டுக் கேள்விகள் கேட்கச் சொல்லுவார் அல்லது வகுப்பு மாணவர்களை இரண்டு அணிகளாக்கி ஒரு அணி மற்றொரு அணியைக் கேள்வி கேட்கவும் பதில் சொல்லவும் தூண்டுவார். சிலநேரங்களில், தான் சிந்தித்ததைக் கேள்வியாக மாணவர்களிடத்திலே கேட்டுவிட்டுக், கடைசியில் அவரே விடையும் சொல்லுவார்.                ஒருமுறை எங்களுக்குத் திருக்குறள் நடத்திவிட்டுப் பொதுவாக ஒரு கேள்வி கேட்டார். ‘எங்க யாராவது சொல்லுங்க பார்க்கலாம். உடம்பு, உயிர் இந்த ரெண்டுல உடம்ப வளர்க்கறதுக்குச் சாப்பாடு சாப்பிடுகிறோம். தண்ணி குடிக்கிறோம் அது ...

ஏட்டில் இருந்ததை நாட்டுக்குத் தந்தவர்… உ.வே.சா…

படம்
             என்னுடைய வாழ்க்கையில் பல ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்கும்போது, ‘உங்களுக்குப் பிடித்தப் புத்தகம் எது? யாருடைய எழுத்தை மீண்டும் மீண்டும் படிப்பீர்கள்?’ என்று கேட்கப்படும் கேள்விக்கு நான் சொல்கின்ற பதில் உ.வே.சாமிநாத ஐயர் அவர்களுடைய  ‘ என்  சரித்திரம்’  என்ற புத்தகம்தான் என்று குறிப்பிடுவேன். ஒரு மகிழ்ச்சி என்னவென்றால் என்னுடைய பிறந்த தினம் 1955 அக்டோபர் 19. சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர் உ.வே.சா. அதிலும் குறிப்பாக 1855 பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி அவர் உத்தமதானபுரம் என்ற ஊரில் வேங்கடராமன் என்பவரின் மகனாகப் பிறக்கிறார். இந்த மகிழ்ச்சியை நான் நெகிழ்ச்சியோடு பல நிகழ்ச்சிகளில் சொல்லுவேன்.               அவருடைய வரலாற்றைப் படிக்கத் தொடங்கும் அனைவருக்கும் நான் சொல்லுவது இதுதான். எழுத்துநடை எவ்வளவு எளிமையாக இனிமையாக இருக்கவேண்டும் என்பதற்கு உ.வே.சா. அவர்களின் ‘என் சரித்திரமே ஒரு சான்று.            உ.வே.சா. தம் ஆசிரியராகிய மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்க...