பெருமைக்குரிய பெண்ணினம்…. மகளிர் தினம்…
மங்கைய ராகப் பிறப்பதற்கே – நல்ல மாதவஞ் செய்திட வேண்டும் அம்மா! பங்கயக் கைந்நலம் பார்த்தலவோ – இந்தப் பாரில் அறங்கள் வளரும் அம்மா! எனப் பெண்களின் பெருமையை அழகாகப் பாடுகின்றார் கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை. மனிதகுலத்தின் தலைமைப்பொறுப்பு பெண்களிடமே இருந்தது. சொத்துடைமை காலத்துக்குப்பின்தான் அது தந்தைவழியாக மாறி ஆண் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தொடங்கினான் என எழுதுகிறார் ராகுல சாங்கிருத்யாயன். நமதுநாட்டைப் பொறுத்தளவில் பூமிக்குப் பெயரும் பெண்தான். புண்ணிய நதிகளுக்குப் பெயர்களும் பெண்ணின் பெயர்கள்தான் (சிந்து, கங்கை, கோதாவரி, யமுனை, காவேரி). நமது புராண மரபுகளிலும் பெண்தெய்வங்களுக்குத் தனிஇடம் உண்டு. இந்தியாவின் அறுவகை மதங்களான சைவம், வைணவம், சாக்தம்,...