இடுகைகள்

அடாது மழை பெய்தாலும்…. விடாது பட்டிமன்றம்…

படம்
              பட்டிமன்ற நடுவராக நான் பேசத் தொடங்கிய காலங்களில் எனது குழுவினரோடு நான் சென்று, பற்பல அனுபவங்களைப் பயணங்களில், மேடைகளில் மாறுபட்ட சூழ்நிலைகளுக்கேற்ப அனுபவித்ததுண்டு. ஒருமுறை இராமநாதபுரத்தில் ஆட்டோ டிரைவர்கள் அனைவரும் சேர்ந்து, தங்கள் சங்கத்தின் சார்பாக ஒரு பட்டிமன்றம் ஏற்பாடு செய்திருந்தார்கள்.                இராமநாதபுரத்தில் அரண்மனைக்கு எதிர்ப்புறத்தில் நான்கு வீதிகள் சந்திக்கிறபொதுஇடத்தில்மேடையமைத்திருந்தார்கள்.  “ சமுதாயநலக்  கருத்துக்களைப்  பெரிதும்  வலியுறுத்திப்  பாடியவர்  பட்டுக்கோட்டை  கல்யாண  சுந்தரமா?  கவியரசு    கண்ணதாசனா?”  என்பது தலைப்பு. இரவு ஒன்பது மணிக்குப் பட்டிமன்றம் தொடங்கியது. லேசான வாடைக்காற்றும், மிதமான மழையும் தொடங்கிற்று. கூடியிருந்த கூட்டம் சற்றும் அயராமல், எங்களுடைய பேச்சுக்கு வரவேற்பையும், ஆர்வத்தையுமும் காட்டி சிரித்து, மகிழ்ந்து கைதட்டியபடி இருந்தனர்.    ...

வா! வா! முருகா! வடிவேல் அழகா!

படம்
         தமிழர்கள் வாழ்வில் தேரும் திருவிழாவும் பிரிக்கமுடியாத ஒன்று. அதிலும் குறிப்பாகச், சித்திரை தொடங்கி பங்குனி வரையிலும் உள்ள நிலாக் காலம் முழுவதும் விழாக்காலங்கள்தான்.           பங்குனி உத்திரத் திருநாளில் முருகப்பெருமானைக் காண்பதற்கு ஆறுபடை வீடுகளையும் நோக்கி, பக்தர்கள் படையெடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்தப் பங்குனி உத்திரத் திருநாளில்தான் முருகப்பெருமான்; சூரபத்மனையும் அவன் தம்பியரையும் வதம் செய்து அந்த வெற்றியின் பரிசாகத் தெய்வானையை மணக்கின்றார். இத்திருநாளை நாம் பங்குனி உத்திரமாகக் கொண்டாடுகின்றோம் என்று நான் எழுதிக்கொண்டிருக்கும்போது நண்பர் பரமசாமி என்னைப் பார்க்க வீட்டிற்கு வந்தார்.                ‘வாங்க! வாங்க! பங்குனி உத்திரத்தன்று பரமசாமியைப் பார்ப்பதில் பரமதிருப்தி’ என்றேன் நான் மகிழ்ச்சியோடு. அவரும் மிக மகிழ்ந்து எல்லா நல்ல நாட்களுக்கும் வாழ்த்துச் சொல்லுவதுபோல, ‘உங்களுக்குப் பங்குனி உத்திரத் திருநாள் வாழ்த்துகள்’ என்று ஆனந்தம் பொ...

ஆண்டவன்கட்டளையும்… அடிமைப்பெண்ணும்…கே.சங்கர்

படம்
தமிழ்த்திரையுலகின் வரலாற்றின் தொடக்கத்தில் இயக்குநர்கள்தான் முடிசூடா மன்னர்களைப்போல திரைப்பட உலகில் ஆளுமை செலுத்தி வந்தார்கள்.  ராஜா சாண்டோ, சுந்தர்ராவ் நட்கர்ணி, தாதா மிராசி, எஸ்.எஸ்.வாசன்  இவர்கள் காலத்தை அடுத்து வந்த  ஸ்ரீதர், கே.பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம்,  தற்போதுள்ள  சங்கர்  எனவும் இவர்களைத் தொடர்ந்து இளையதலைமுறையைச் சார்ந்த  வினோத், லோகே ஷ்  கனகராஜ், நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ்  போன்றவருடைய தனித்தன்மைகளையும் சொல்லிக்கொண்டே செல்லலாம். இத்தகைய இயக்குநர்கள் வரிசையில் தமிழகத்தின் இருபெரும் ஆளுமைகளாகத் திகழ்ந்த  புரட்சித்தலைவர்  எம். ஜி. ஆர்,  நடிகர்  திலகம்  சிவாஜி கணேசன்,  காதல்  மன்னன்  ஜெமினி  கணேசன்,  ஜெய்சங்கர்,  முத்துராமன் , என நான்கு தலைமுறைநடிகர்களையும்  என். டி. ராமாராவ்,  எம். ஜி. ஆர்,  செல்வி. ஜெயலலிதா  என    மூன்று  முதல்வர்களையும்  இயக்கிய பெருமைக்குரியவர் ஒருவர் உண்டென்றால் அவர்தான்  டைரக்டர்  கே. சங்கர்....

அழ(கு)வள்ளியப்பா

படம்
                                                                        வட்டமான தட்டு                                தட்டு  நிறைய  லட்டு                                லட்டு  மொத்தம்  எட்டு…                இப்படிப்பட்ட பாட்டுக்கள்தான் குழந்தைகளின் உள்ளங்களில் எளிதில் பதியும். பொருளும் புரியும். குழந்தைகளுக்கான இலக்கியம் என்பது தமிழில்  ஆத்திசூடி,  கொன்றைவேந்தன்,  வெற்றிவேற்கை  எனத் தொடங்குகிறது. ...

இந்தோனேசியா சோழர் கோவில்…

படம்
            இந்தோனேசியாவில் முதல்நாள் கூட்டத்தை முடித்துக் கொண்டு நானும் என் துணைவியாரும் நாங்கள் தங்கியிருந்த 60மாடிகள் கொண்ட பிரம்மாண்டமான ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தபோது இரவு மணி 12. ஆனால், அந்நகரமோ நமது மதுரையைப் போலவே தூங்கா நகரமாகச் சுறுசுறுப்பாக அந்த நேரத்திலும் இயங்கிக் கொண்டிருந்தது.                ‘காலை 7மணிக்கு விமானம். நாம் 6 மணிக்கு அங்கே இருக்க வேண்டும். 5மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு விடலாம். நான்கு மணிக்கு எழுந்து தயாராகி விடுங்கள்’ என்று சொல்லிவிட்டுத் தமிழ்ச்சங்கத் தலைவர் விசாகன் சென்றபோது, நாங்கள் திகைத்துப் போனோம். நாங்கள் தங்கியிருந்த அறை 50வது மாடியில் இருந்தது. அங்கிருந்து அந்த நகரத்தைப் பார்த்தபோது வியப்பாக இருந்தது.                மிகப்பெரிய சாலைகளில் மல்லிகைப் பூ போன்றும், கனகாம்பரப் பூ போன்றும் கார்கள் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருந்தன. ஆமாம்! வந்துகொண்டிருக்கும் கார்களின் முன்வி...

ஹரித்துவாரில் ஞானசம்பந்தன்….

படம்
          நூற்றாண்டுகள் கண்ட பழமையும் பெருமையும் மிக்க தமிழ்ச் சங்கம்.  நான்காம்  தமிழ்ச்  சங்கம்  எனும் பெயரால் அழைக்கப்படும் மதுரைத் தமிழ்ச்சங்கம் (தற்போதுசெந்தமிழ்க்கல்லூரி).  பாலவநத்தம்  ஜமீன்தார்  பாண்டித்துரைத்    தேவர்  அ வர்களால் நிறுவப்பெற்ற புகழுடையது. காலஞ்சென்ற  என்  தந்தையார்  புலவர்  கு. குருநாதன் , 1933ஆம் ஆண்டு முதல் 1942ஆம் ஆண்டு வரை  பால  பண்டிதம்,  பண்டிதம்,  புலவர்  பட்டங்களை இத்தமிழ்ச் சங்கத்தில் பயின்றுதான் பெற்றுத் தேர்ந்தார்.                 திரு. நாராயண  அய்யங்கார்,  மு.  இராகவ  அய்யங்கார்,  இரா.  இராகவ  அய்யங்கார்  போன்ற தமிழ்ச் சான்றோர்களிடத்தில் பாடம் பயின்ற பெருமை தனக்கு உண்டு என அடிக்கடி கூறுவார் என் தந்தையார். தவிரவும், அக்காலத்தில் தேர்வில் வெற்றிபெறுவது மிகக் கடினம் என்பதைச் சொல்லி ஓர் உதாரணமும் எனக்குச் சொன்னார்.  ...

சந்தேகப் பேய்…

படம்
          ஒருமுறை நண்பர்களுடன் கொடைக்கானல் கிளம்பினோம். என்னைச் சேர்த்து ஐந்து பேர். இருக்கிற காசை வைத்துக்கொண்டு, சங்கடங்களைக் கூட, சந்தோஷமாக எடுத்துக்கொள்ளும் வயது அப்போது. நாங்கள் ஐந்து பேருமே, கொடைக்கானலை அப்போதுதான் பார்க்கிறோம்.                நாங்கள் பேருந்தில் இருந்து இறங்கியதும், அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் எங்கள் தோற்றத்தைப் பார்த்தவுடன், சடாரென்று கைடாக மாறி, எங்களுக்கு வழிகாட்ட, தங்க, உணவு ஏற்பாடு செய்யத் தயாராகி விட்டார். தங்குவதற்கு ஊருக்கு நடுவிலிருந்தால் அதிக வாடகை ஆகுமென்று மரங்களடர்ந்த தோப்புக்கு நடுவே, ஏற்பாடு செய்து கொடுத்தார்.                அது  ‘ நெஞ்சம்  மறப்பதில்லை’  வீடு போல் இருந்தது. மாடியறையில் தங்குதற்கு ஏற்பாடு செய்துவிட்டு, ஒரு திடுக்கிடும் செய்தியையும் சொன்னார். அந்த அறையில் ஒரு பெண் தூக்கு மாட்டிச் செத்ததாகவும், அந்த உடலைப் புதைக்காமல் எரித்துவிட்டதால் பேய் வருவதற்கான சாத்...