காடு… கடவுளின் வீடு…
“ மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண்.” பூமியில் மனிதஇனம் தோன்றுவதற்கு முன்பு தோன்றியவை மரங்கள் சூழ்ந்த வனம். மரங்களைத் தொடர்ந்தே உலக உயிரினங்களும் பின்னர் மனித உயிர்களும் தோன்றியிருக்கலாம் என்பது அறிவியல் கூறும் செய்தி. உலகெங்கும் காடுகள் இருந்தன என்பதற்குச் சான்றாதாரங்கள் அந்தந்த நாட்டில் தோன்றிய இலக்கியங்கள், கல்வெட்டுக்கள் போன்றவையே. இந்திய பரத கண்டத்தில் தோன்றிய ஆதி காவியமான வால்மீகியால் எழுதப்பட்ட இராமாயணத்தில் இராமன் 14வருடங்கள் காட்டுக்குச் செல்ல வேண்டுமென்று கைகேயி வரம் கேட்பதாகக் காட்டப்படுகிறது. இதை அடுத்துத் தோன்றிய மகாபாரதத்திலும் பாண்டவர்களும் பாஞ்சாலியும் 12ஆண்டுகள் காட்டில் வசிக்கவேண்டுமென்று துரியோதனன் கட்டளையிட்டதாக அக்காப்பியம் எடுத்துக்கூறுகிறது. ...