இடுகைகள்

இந்தோனேசியா தமிழ்ச்சங்கத்தில் கமல்ஹாசன்…!

படம்
       இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் உள்ள தமிழ்ச்சங்க இரண்டாம் ஆண்டு விழாவிற்கு நீங்கள் வந்திருந்து சிறப்புரை ஆற்ற வேண்டும்’ என்ற அழைப்பு வந்தபோது, நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. நாம் சிறு வயதில் படித்த  ‘ கடல்  புறா’ ‘ பொன்னியின்  செல்வன்’  போன்ற நாவல்களிலும்,  சிலப்பதிகாரம்,  மணிமேகலை  போன்ற காப்பியங்களிலும் சொல்லப்பட்ட அற்;புதமான தீவுக் கூட்டங்களைக் காணப்போகிறோம் என்று!     அந்தமான்,  நிகோபார்,  ஜாவா,  சுமத்திரா  என்னும் தீவுக் கூட்டங்கள்  முந்நீர்ப்பழந்தீவுகள்  என இலக்கியங்களில் கூறப்படும் தீவுக் கூட்டங்களில் ஒன்றான  ‘ ஜாவா’  எனும் பெரும் தீவே தற்போது இந்தோனேசியா என்ற பெயரிலும், அதன் தலைநகர்  ஜகார்த்தா  என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றது.                 ‘ சாவகம்’  என்னும் தீவு,  மணிமேகலை  எனும்  காப்பியத்தில்    குறிப்பிடப்படுகிறது. இத்...

எந்தக் கூட்டணியும் வேண்டாம்…!

படம்
                ‘ பாலைக்  கொடுத்துத்  திருஞானசம்பந்தரையும்                 சூலைக்  கொடுத்துத்  திருநாவுக்கரசரையும்                 ஓலை  கொடுத்துச்  சுந்தரமூர்த்தி  நாயனாரையும்                 சிவபெருமான்  ஆட்கொண்டார்’                எனத்  திருமுருக  கிருபானந்த  வாரியார்  சுவாமிகள்  பல்லாண்டுகளுக்கு முன் மதுரை ஆடி வீதியில் பேசியதை, சிறுபையனாக இருந்து கேட்டு ரசித்திருக்கிறேன். என் தந்தையார் இதற்கு அருமையாக விளக்கமும் சொன்னார்.                ‘திருஞானசம்பந்தப்  பெருமானுக்கு இறைவன் இறைவிமூல...

வால்ட் விட்மனும்… பாரதியும்…

படம்
          கவிதை உலகில் உலகம் முழுவதும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய பெருமை பலருக்கு உண்டு என்று சொன்னாலும் அமெரிக்காவில் பிலடெல்பியா மாநிலத்தில் பிறந்த வால்ட் விட்மனுக்கு முக்கியப் பங்குண்டு என்று உலக இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவர். கவிதைகளின் வடிவத்தில் இல்லை அதன் உயிர், உட்பொருளில்தான் இருக்கிறது என்று அதுவரை கவிதை வடிவத்திற்குத் தந்த முக்கியத்துவத்தை மாற்றி உள்ளடக்கத்துக்கும் வரலாம் என்று சொன்னவர்தான் வால்ட் விட்மன்.                தமிழகத்திலே எட்டயபுரத்திலே பிறந்த மகாகவி பாரதி தான் கற்ற ஆங்கிலக் கல்வியின் பயனாக  ஜோன்  கீட்ஸ்,  ெஷ ல்லி,  பைரன்  போன்ற கவிஞர்ளோடு வால்ட் விட்மனையும் கற்று மகிழ்ந்தார். தன்னுடைய பெயரைக்கூட ெஷல்லிதாசன் என்று அழைத்துக்கொண்டார் பாரதி. வால்ட் விட்மனின்  ‘ புல்லின்  இதழ்கள்’  என்னும் புதுக்கவிதை வடிவமே உலகெங்கும் உள்ள மக்களால் விரும்பி படிக்கப்பட்டது. தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் ஒப்பிலக்கியத்துறை (Compar...

இல்லாதன இல்லை இளங்குமரா…’

படம்
        சில ஆண்டுகளுக்கு முன் ஒருநாள்…. இராமநாதபுரம் நகைச்சுவை மன்றத்தை உருவாக்க உதவியாய் இருந்த என் இனிய நண்பர், பண்பாளர்  திரு. நாராயணன்  அவர்கள், நண்பர்களின் கூட்டத்தாரோடும், அவர்களின் குடும்பத்தாரோடும் எங்களை இராமேசுவரத்திற்கு அருகிலே மண்டபத்திற்கு இடையிலே உள்ள நல்லதண்ணீர் தீவுக் கூட்டத்திற்கு மோட்டார் படகினிலே அழைத்துச் சென்றார்.             அத்தீவு அகலம் குறைந்து நீண்டு காணப்பட்டது. அத்தீவில் ஒருபுறம் ஆர்ப்பரிக்கும் கடலலை. மறுபுறம் ஞானிகளின் மனம் போன்ற சலனமற்ற நீர்நிலை! பளிங்கு தண்ணீர், வெண்பட்டு மணல், புன்னை மரங்கள், அதைப் பார்த்து ஆனந்தப்பட்ட நான் அந்த அமைதியான கடல் நீரில் இறங்கினேன்.                ‘ஐயா! அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துராதீங்க!’ என்று சொல்லி, இடுப்பளவு நீரில் ஓடிவந்து ஒரு மீனவர் என் கையைப் பிடித்துக்கொண்டார்.              ...

காலத்தை வென்ற வெண்கலக்குரலோன் டி.எம்.எஸ்.

படம்
       இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுக்கும் பெயர் பெற்றது பாண்டியர்கள் அரசாண்ட தென்பாண்டி மண்டலத்தின் தலைநகராகிய மதுரை.     இம்மதுரையில் இசையை வளர்த்தெடுக்கவே இசைக்கு இடையூறு ஏற்பட்டபோது அதனை மாற்றிக்காட்டவே எம்பெருமானாகிய சொக்கநாதப்பெருமான் பலமுறை மதுரைக்கு வந்து மதுரையில் பல அற்புதத் திருவிளையாடல்களை நிகழ்த்தியுள்ளார். தங்கள் குரலால் பெருமைபெற்ற  மதுரை மணி ஐயர், மதுரை சண்முக வடிவு சுப்புலெட்சுமி (எம்.எஸ்.சுப்புலெட்சுமி) மதுரை சோமு  போன்றோர் தங்களுடைய இன்குரலால் தமிழுக்கும் தமிழிசைக்கும் பெருமை சேர்த்தனர்.       என்.பி.என்.சேதுராமன் பொன்னுச்சாமி சகோதரர்கள்  தங்கள் விரலால் நாதஸ்வரத்தால் இசைக்கு மெருகூட்டினர்.  சங்கரதாஸ் சுவாமிகள்  போன்றவர்கள் நாடகக் கலைக்கு உயிரூட்டினர். இன்றைக்கும் மதுரையிலே சங்கரதாஸ் சுவாமி சிலையாக அமர்ந்து அரு௵ட்டுகின்றார். இத்தகைய பெருமைமிகுந்த மதுரை மாநகரின் பெருமைக்குத் தன் குரலால் பெருமை சேர்த்த கலைஞர்தான்  டி.எம்.சௌந்தரராஜன்  அவர்கள்.        அவரது...

நீரே…. தெய்வம்….!

படம்
நீர்இன்று  அமையாது  உலகெனின்  யார்யார்க்கும்                              வான்இன்று  அமையாது  ஒழுக்கு.” என்பது வள்ளுவர் வாக்கு. இந்த உலகம் நீரால் சூழப்பட்டது. முந்நீராகிய உப்புக் கடல்நீரும், நன்னீராகிய குடிநீராரும்தான் இந்த உலகத்து உயிர்களை வாழ வைக்கின்றன. கடல்நீர் முக்கால் பகுதி பூமியிலிருந்தாலும், குடிநீராகிய நன்னீர் இருந்தால்தான் மனிதர்களும், மற்ற உயிர்களும் தாவரங்களும் வாழமுடியும். நன்னீரின் பெருமையைப் பற்றிக் கூறும்போது,                 மடல்பெரிது  தாழை  மகிழினிது  கந்தம்;                 உடல்சிறிய  ரென்றிருக்க  வேண்டா –  கடல்பெரிது                 மண்ணீரு  மாகா  ததனருகே  சிற்றூறல்       ...

காடு… கடவுளின் வீடு…

படம்
                “ மணிநீரும்  மண்ணும்  மலையும்  அணிநிழற்                 காடும்  உடைய  தரண்.”                பூமியில் மனிதஇனம் தோன்றுவதற்கு முன்பு தோன்றியவை மரங்கள் சூழ்ந்த வனம். மரங்களைத் தொடர்ந்தே உலக உயிரினங்களும் பின்னர் மனித உயிர்களும் தோன்றியிருக்கலாம் என்பது அறிவியல் கூறும் செய்தி. உலகெங்கும் காடுகள் இருந்தன என்பதற்குச் சான்றாதாரங்கள் அந்தந்த நாட்டில் தோன்றிய இலக்கியங்கள், கல்வெட்டுக்கள் போன்றவையே.  இந்திய பரத கண்டத்தில் தோன்றிய ஆதி காவியமான  வால்மீகியால்  எழுதப்பட்ட  இராமாயணத்தில்  இராமன் 14வருடங்கள் காட்டுக்குச் செல்ல வேண்டுமென்று கைகேயி வரம் கேட்பதாகக் காட்டப்படுகிறது. இதை அடுத்துத் தோன்றிய மகாபாரதத்திலும் பாண்டவர்களும் பாஞ்சாலியும் 12ஆண்டுகள் காட்டில் வசிக்கவேண்டுமென்று துரியோதனன் கட்டளையிட்டதாக அக்காப்பியம் எடுத்துக்கூறுகிறது.    ...