இடுகைகள்

பருவகாலக் கல்வி…

படம்
    ஜுன், ஜுலை தொடங்கிவிட்டாலே நம் பள்ளிகளில் பரபரப்பு தொடங்கிவிடுகிறது. காரணம் பிள்ளைகளைப் பள்ளிக்கூடம், கல்லூரி போன்ற இடங்களில் சேர்ப்பதற்குப் பெரும் முயற்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டிய காலங்கள் இந்தக் காலங்கள்தான்.                 ‘ ஆடிப்பட்டம்  தேடிவிதை’ ‘ பருவத்தே  பயிர்செய்’  என்ற பழமொழிகள் விவசாயம் செய்கிய விவசாயிகளுக்கு எவ்வளவு பொருத்தமோ அவ்வளவு பொருத்தம், சரியான நேரத்தில் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் பெற்றோர்களுக்கும் உண்டு. சரியான பருவத்தைத் தவறவிட்ட விவசாயியை ஊரே சேர்ந்து கண்டிப்பதும் உண்டு.                 ‘ உழுகிற  காலத்தில்  ஊர்  சுத்தப்  போயிட்டு  அறுக்கிற  காலத்தில்  அருவாளோடு  வந்தா  எப்படி  விளங்கும்’  என்று கிராமத்துப் பெரியவர்கள் சொலவடை சொல்லிக் காட்டுவார்கள். சரியான பள்ளிக்கூடத்தை, கல்லூரியைத் தேர்ந்தெடுத்து, அதிலும் சரியான ...

விளக்குகளை ஏற்றும் விளக்கு… ராகுல சாங்கிருத்தியாயன்

படம்
          நான் மேடையில் பேசுகிறபோதெல்லாம் எனக்குப் பிடித்த புத்தகம், என்னைத் தொடர்ந்து பயணிக்கத் தூண்டிய புத்தகம் என்று ஒன்று இருக்குமானால் அது  ‘வால்கா முதல் கங்கை வரை’  என்ற புத்தகம்தான் எனக் கூறுவேன். இந்தப் புத்தகத்தை நான் பள்ளியில் படிக்கிற காலத்தில் படிக்கத் தொடங்கி இன்றுவரை படித்து வருகிறேன். இதனுடைய ஆசிரியர்  கேதார்நாத் பாண்டே  என்ற இயற்பெயர் கொண்ட  ராகுல சாங்கிருத்தியாயன் .           இவருடைய வாழ்கை வரலாற்று நூலும் இவரின் பயண நூல்களும் என்னை அக்காலத்திலேயே வியக்க வைத்தன. தமிழ்மொழி உள்பட 33மொழிகள் தெரிந்த பன்மொழிக் கலைஞர் இவர். இவருடைய பயணங்கள் மூலமாக இந்திய நாட்டின் இயற்கை வளத்தை மட்டுமல்லாமல் இந்தியப் பண்பாட்டையும் அறிந்துகொள்ளலாம்.           மனிதகுல வரலாற்றைப் பற்றி  ஜார்ஜ் தாம்சன்  என்பவர் எழுதிய நூலையும் நான் படித்திருக்கிறேன். ஆயினும்  ‘வால்கா முதல் கங்கை வரை’  நூலில் மனிதகுல வரலாறு தொடங்கி இந்தியாவில் காந்தியடிகளுக்கும் அம்பேத்காருக்கும் நடந்த...

முத்திரைக் கதைகளில் முத்திரை பதித்தவர்….

படம்
இருபதாம் நூற்றாண்டில் தமிழ் எழுத்தாளர் உலகில் தனக்கெனத் தனியே ஒரு சிம்மாசனத்தை உருவாக்கிக்கொண்ட பெருமை  எழுத்தாளர் ஜெயகாந்தன்  அவர்களுக்கே உண்டு. நான் பள்ளியில் படிக்கிற காலங்களில் ஆனந்தவிகடனில் இவருடைய கதைகள் தொடர்ச்சியாக முத்திரைக் கதைகளாகப் பரிசு பெற்று வந்ததை நான் அறிவேன். என் தந்தையார் என்னைப் படிக்கச் சொல்லிக் கேட்பார். பாரதம், இராமாயணம் இவற்றோடு நவீன கால இலக்கியம் என்று வரும்போது  கல்கி, ஜெயகாந்தன்  போன்றோருடைய படைப்புகளையும் படிக்கச் சொல்லுவார். குறிப்பாகச் சொல்வதாக இருந்தால் ஜெயகாந்தனுடைய  ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’  நாவலை நான் படிக்கும்போதும், அதில் வருகிற  ஓவியர் கோபுலு  அவர்களின் ஓவியங்களைப் பார்க்கிறபோதும் பெருமகிழ்வு அடைவேன் (2003க்குப் பிறகு கலைஞானி கமல்ஹாசன் அவர்களுடைய நட்பு எனக்குக் கிடைத்தது. அவரிடத்தில் ஒருநாள் இந்த நாவலை ஏன் படமாக்காமல் போனீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவரும் ‘அதற்கான முயற்சிகளில் நான் ஈடுபட்டேன். ஹென்றி பாத்திரத்தில் நடிப்பதற்காகத் தயாராகக்கூட இருந்தேன். அதற்கேற்ற சூழ்நிலை அமையவில்லை’ என்றார் ...

விடுமுறையும்…. சுற்றுலாவும்….

படம்
                    கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. பள்ளிக்கூட, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்குக் கொண்டாட்டமான காலம் இது. சுற்றுலா போகலாம். முழுப்பரீட்சை லீவை முழுவதும் அனுபவிக்க, பாட்டி, தாத்தா வீட்டுக்கு அல்லது அத்தை – மாமா வீட்டுக்குச் சென்று வரலாம். சைக்கிள் பழகலாம், நீச்சல் பழகலாம்… இவையெல்லாம் அந்தக் கால மாணவர்களுக்கு வேண்டுமானால் பொருந்தும். ஆனால் இன்றைக்கு எல்.கே.ஜி., யு.கே.ஜி, படிக்கிற குழந்தைகளுக்குக் கூட இது பொருந்தாது. ஏனென்றால் இப்போதிருக்கிற பெற்றோர்களும், ஆசிரியர்களும்…. ஏன் குழந்தைகளும் கூட விடுமுறையின் இனிமை பற்றிச் சிந்திக்கிறார்களா? தெரியவில்லை!                நகரத்தில் விடுமுறையில் பிள்ளைகளை எங்கே விடுவது எனத் தெரியாமல்  ‘ பத்து  நாட்களில்  அறிவாளியாகலாம்’ ‘ இருபது  நாளில்  எல்லோரையும்  வெல்லலாம்’  என்று விளம்பரப்படுத்துகின்ற தனியார் அமைப்புகளில் பிள்ளைகளைத் திணித்து, அவர்கள் அறிவாளிகளாகப் போகும் நாட்களை எண...

பக்திப் பயிரும்… பசுமைப் பயிரும்…நம்மாழ்வார்!

படம்
             நம் இந்திய நாடு வேளாண்மையில் சிறந்த விவசாய நாடு. இங்கு வற்றாத ஜீவநதிகள் உண்டு. காலம் அறிந்து பெய்யும் பருவமழையும் உண்டு. இத்தகைய இயற்கை வளங்கள் நம் நாட்டிற்குக் கிடைத்த வரங்கள்.                குறிப்பாகத் தமிழகம் மூவாயிரம் ஆண்டுப் பழமையும் பெருமையும் உடையது. வேட்டைக்காரச் சமுதாயமாக இருந்த மனிதஇனம், கால்நடைச் சமுதாயத்திற்கு மாறிப் பின்னர் ஆற்றங்கரை நாகரீகத்தை நாடி வேளாண்மைச் சமுதாய வாழ்க்கை முறையைத் தொடங்கியது.      நம் தமிழர்கள்  மலையும் மலைசார்ந்த இடத்தைக்   குறிஞ்சி  என்றும்,  காடும் காடு சார்ந்த இடத்தை   முல்லை  என்றும்,  வயலும் வயல் சார்ந்த பகுதிகளை   மருதம்  என்றும்,  கடலும் கடல் சார்ந்த பகுதிகளை நெய்தல்  என்றும்  மணலும் மணல் சார்ந்த பகுதிகளைப் பாலை  என்றும் பிரித்து அந்தந்த நிலத்துக்கேற்ற வேளாண்மை முறைகளையும் தொழில்களையும் செய்து வந்தார்கள்.      ...

பெண்ணரசியின் பேரருள்… (சித்திரைத் திருவிழா)

படம்
               கல்லூரியில் முதுகலை வகுப்பில் ஒரு மாணவி எழுந்து, ‘ஐயா சித்திரைத் திருவிழாவை சித்திரை மாதம் ஏன் கொண்டாடுகிறோம்’ என்று கேட்டவுடன் பலர் சிரித்தார்கள்.                ‘சித்திரைத் திருவிழாவை சித்திரை மாதம் கொண்டாடம பிறகு என்ன செப்டம்பர் மாசத்துலய கொண்டாடுவாங்க’ என்று ஒரு பையன் சொல்ல, எல்லோரும் சத்தம்போட்டுச் சிரித்தார்கள்.      வகுப்பு நடத்திக்கொண்டிருந்த நான், கேள்வி கேட்ட அந்தப் பெண்ணைப் பாராட்டிவிட்டு, அந்தச் செப்டம்பர் மாத பையனைப் பார்த்து, ‘நீ சொல்லேன் சித்திரைத் திருவிழாவை சித்திரை மாதம் ஏன் கொண்டாடுகிறார்கள்?’ என்று நான் கேட்க, அந்தப் பையன் ‘இதான் நம்ம சிலபஸ்ல இல்லேல சார்’ என்றான்.         ‘இருந்தாலும் சாய்ஸ்ல விட்ருவோம்;’ என்றான் இன்னொருவன். அப்போது நான் சற்றே கடுமையாக, ‘மதுரையில் பிறந்து மதுரையில் வளர்கிற நீங்களே இப்படிப் பேசலாமா?’ என்று சொல்லிவிட்டு, இந்தச் சித்திரைத் திருவிழா கொண்டாடத் தொடங்கி எவ்வளவு ...

அனுபவமே நல்ல கல்வி…

படம்
                                   நாம் சிறுகுழந்தைகளாக இருக்கும்போது , படம் பார்த்துக் கதை சொல்லுதல் நமக்குப் பிடித்தமான ஒன்று. அதிலும் வண்ணப்படங்களாக இருந்துவிட்டால் , குழந்தைகள் முகத்தில் மகிழ்ச்சி பொங்கும். இந்தக்காலக் குழந்தைகள் இத்தகைய படங்களை அனிமே ஷ ன் என்று கார்ட்டூன் மூலமாகக் கண்டு மகிழ்கிறார்கள்.                   ஒரு படம் ஆயிரம் செய்திகளை நமக்கு விளக்கும். சமீபத்தில் நான் , இலக்கிய விழாவிற்காக ஒரு பள்ளிக்குச் சென்றிருந்தேன். ஆயிரம் மரங்களுக்கு நடுவே அந்தப் பள்ளி அழகுற அமைந்திருந்தது. பிற்பகல் நேரத்தில் மரங்களுக்கு நடுவே மாணவ , மாணவிகள் அமர்ந்திருக்க   நான் பேசத் தொடங்கினேன். மரங்களின் பசுமை , பறவைகளின் ஓசை , வண்டுகளின் ரீங்காரம் இவற்றுக்கு நடுவே மண்தரையில் சம்மணமிட்டு , மாணவ மாணவிகள் அமர்ந்திருந்தார்கள். என் பேச்சுக்கு இடையில் நான் இவற்றைக் குறிப்பிட்டுக் கொண்...