ஞானம் வந்திருச்சு…
இப்போதைய அன்றாட வாழ்வில் எவ்வளவோ நெருக்கடிகள். அவசரங்கள். இதனால் மனஇறுக்கம் கூடி விடுகிறபோது இதிலிருந்த நம்மை விடுபட வைப்பது நகைச்சுவை உணர்வே. அதுதான் நம் மனசை லேசாக்குகிறது. நம் பிரச்சனைகளை இறகுபோல உணரவைக்கிறது. எல்லோருக்குமே இயல்பாக நகைச்சுவை உணர்வு இருக்கி;றது. இல்லை என்றால் ரசிக்க முடியாது. நகைச்சுவைக்கென்று சூழலும் மனநிலையும் முக்கியம். சில திரைப்படங்களில் ஒரு நகைச்சுவை நடிகர் தோன்றியதுமே சிரித்து விடுவார்கள். பழைய படமாகிய ‘ புதுமைப்பித்தன்’ னில் ஒரு காட்சி. படம் ஆரம்பித்ததும் கப்பலைக் காட்டுவார்கள். கொடியை அதில் ஏற்றும்போது, தலைகீழாக மேலே போவார் சந்திரபாபு. அந்தக் காட்சியே சிரிப்பதற்கானச் சூழலை உருவாக்கிவிடும். திருச்சி பேராசிரியராகிய ராதாகிருஷ்ணன் அவர்கள் தலையில் கட்டுக்குடுமி வைத்திருப்பார். மேடையில் தன்னைத்தானே அறிமுகப்படுத்தும்போதே; இப்படி ஆரம்பிப்பார். ‘தஞ்சாவூர் பஸ் ஸ்டாண்டில் ஒரு தடவை போய் இறங்கினதுமே ஒருத்தன் வந்து என்னைக் கும்பிட்டான். ‘என்னை நீ பார்த்திருக்கிறாயா?’...