இடுகைகள்

பாட்டுக்கோட்டை… பட்டுக்கோட்டை…

படம்
         கவிஞர்  வாலி  அவர்கள்  ஸ்ரீரங்கத்தில்  இருந்து திரைப்படத்தில் பாடல்கள் எழுதுவதற்காகச் சென்னைக்குச் செல்கிறார். ஏற்கனவே திரைத்துறையில் இருந்த  நடிகர்  வி. கோபாலகிரு ஷ் ணன்  தனது அறையில் இவரைத் தங்கவைத்து கவிஞர் வாலிக்காக, வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருந்தார். அவரது அறையில் இவரைப்போலவே திரைப்பட வாய்ப்புத்தேடி பல நண்பர்கள் வருவது வழக்கமாம்.        அப்படி வந்துபோனவர்களில் ஒருவர் ஒரு துணிப்பையை வைத்துவிட்டு மாலையில் வருகிறேன் என்று வாலியிடம் சொல்லிவிட்டுப் போனாராம். அவர் தந்துவிட்டுப் போன துணிப்பையிலிருந்த நோட்டுப்புத்தகத்தில் சில கவிதை வரிகள் இருப்பதைக் கவனித்த வாலி அதைப் படித்துப் பார்த்து மகிழ்ந்து போனாராம். அதில் ஒரு கவிதை,                 அம்பது  பைசா  நிக்கிறமாதிரி  மீச  வச்சான்                 அவன்  தோச  விக்கி...

ஞானம் வந்திருச்சு…

படம்
      இப்போதைய அன்றாட வாழ்வில் எவ்வளவோ நெருக்கடிகள். அவசரங்கள். இதனால் மனஇறுக்கம் கூடி விடுகிறபோது இதிலிருந்த நம்மை விடுபட வைப்பது நகைச்சுவை உணர்வே.      அதுதான் நம் மனசை லேசாக்குகிறது. நம் பிரச்சனைகளை இறகுபோல உணரவைக்கிறது. எல்லோருக்குமே இயல்பாக நகைச்சுவை உணர்வு இருக்கி;றது. இல்லை என்றால் ரசிக்க முடியாது.    நகைச்சுவைக்கென்று சூழலும் மனநிலையும் முக்கியம். சில திரைப்படங்களில் ஒரு நகைச்சுவை நடிகர் தோன்றியதுமே சிரித்து விடுவார்கள். பழைய படமாகிய  ‘ புதுமைப்பித்தன்’  னில் ஒரு காட்சி. படம் ஆரம்பித்ததும் கப்பலைக் காட்டுவார்கள். கொடியை அதில் ஏற்றும்போது, தலைகீழாக மேலே போவார் சந்திரபாபு. அந்தக் காட்சியே சிரிப்பதற்கானச் சூழலை உருவாக்கிவிடும்.      திருச்சி பேராசிரியராகிய ராதாகிருஷ்ணன் அவர்கள் தலையில் கட்டுக்குடுமி வைத்திருப்பார். மேடையில் தன்னைத்தானே அறிமுகப்படுத்தும்போதே; இப்படி ஆரம்பிப்பார். ‘தஞ்சாவூர் பஸ் ஸ்டாண்டில் ஒரு தடவை போய் இறங்கினதுமே ஒருத்தன் வந்து என்னைக் கும்பிட்டான். ‘என்னை நீ பார்த்திருக்கிறாயா?’...

கலைமகளுக்கே ஆசிரியர்… கி.வா.ஜ.,…

படம்
    தமிழில் சிலேடை என்பது ‘ இரட்டுற மொழிதல் ’ என்ற பொருளில் வரும் . அக்காலத்தில் சிலேடையாகப் பாடுவதில் காளமேகப்புலவர் வல்லவர் . பேச்சில் சிலேடை தொனிக்கப் பேசுபவர்கள் தம் பேச்சால் அனைவரையும் ஈர்ப்பர் . அத்தகைய வல்லமை பெற்றவர்களில் ஒருவர்தான் கி . வா . ஜகந்நாதன் அவர்கள் . இவர் மிகச்சிறந்த எழுத்தாளர் , பேச்சாளர் என்பதோடு பத்திரிக்கை ஆசிரியராகவும் இருந்தார் .   ஒருமுறை இவருடைய நண்பர் இவரைப் பாராட்டிப் பேசும்போது ‘ உங்களுக்குக் கிடைத்த புகழ் யாருக்குக் கிடைக்கும் ’ என்றாராம் . அதைக் கேட்டு கி . வா . ஜ . வியப்போடு , ‘ என்ன புகழ் ?’ என்று கேட்க , ‘ நீங்கள் கலைமகளுக்கே ஆசிரியராயிற்றே ’ என்று புன்னகையோடு சொன்னாராம் . கேட்ட கி . வா . ஜ . வின் முகத்திலும் புன்னகை .   இவரின் சிலேடைகள் இடத்திற்கும் நேரத்திற்கும் ஏற்றபடி அமையும் . ஒருமுறை இவர் ஒரு ஊருக்குப் பேசுவதற்காக இரயிலில் சென்றாராம் . காலைநேரத்தில் இரயில் அந்த ஊரில் போய் நிற்க , இவரை வரவேற்க வந்தவர்கள் , பெரிய மாலையைக் கொண்டுவந்து இவர் கழுத்த...

பருவகாலக் கல்வி…

படம்
    ஜுன், ஜுலை தொடங்கிவிட்டாலே நம் பள்ளிகளில் பரபரப்பு தொடங்கிவிடுகிறது. காரணம் பிள்ளைகளைப் பள்ளிக்கூடம், கல்லூரி போன்ற இடங்களில் சேர்ப்பதற்குப் பெரும் முயற்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டிய காலங்கள் இந்தக் காலங்கள்தான்.                 ‘ ஆடிப்பட்டம்  தேடிவிதை’ ‘ பருவத்தே  பயிர்செய்’  என்ற பழமொழிகள் விவசாயம் செய்கிய விவசாயிகளுக்கு எவ்வளவு பொருத்தமோ அவ்வளவு பொருத்தம், சரியான நேரத்தில் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் பெற்றோர்களுக்கும் உண்டு. சரியான பருவத்தைத் தவறவிட்ட விவசாயியை ஊரே சேர்ந்து கண்டிப்பதும் உண்டு.                 ‘ உழுகிற  காலத்தில்  ஊர்  சுத்தப்  போயிட்டு  அறுக்கிற  காலத்தில்  அருவாளோடு  வந்தா  எப்படி  விளங்கும்’  என்று கிராமத்துப் பெரியவர்கள் சொலவடை சொல்லிக் காட்டுவார்கள். சரியான பள்ளிக்கூடத்தை, கல்லூரியைத் தேர்ந்தெடுத்து, அதிலும் சரியான ...

விளக்குகளை ஏற்றும் விளக்கு… ராகுல சாங்கிருத்தியாயன்

படம்
          நான் மேடையில் பேசுகிறபோதெல்லாம் எனக்குப் பிடித்த புத்தகம், என்னைத் தொடர்ந்து பயணிக்கத் தூண்டிய புத்தகம் என்று ஒன்று இருக்குமானால் அது  ‘வால்கா முதல் கங்கை வரை’  என்ற புத்தகம்தான் எனக் கூறுவேன். இந்தப் புத்தகத்தை நான் பள்ளியில் படிக்கிற காலத்தில் படிக்கத் தொடங்கி இன்றுவரை படித்து வருகிறேன். இதனுடைய ஆசிரியர்  கேதார்நாத் பாண்டே  என்ற இயற்பெயர் கொண்ட  ராகுல சாங்கிருத்தியாயன் .           இவருடைய வாழ்கை வரலாற்று நூலும் இவரின் பயண நூல்களும் என்னை அக்காலத்திலேயே வியக்க வைத்தன. தமிழ்மொழி உள்பட 33மொழிகள் தெரிந்த பன்மொழிக் கலைஞர் இவர். இவருடைய பயணங்கள் மூலமாக இந்திய நாட்டின் இயற்கை வளத்தை மட்டுமல்லாமல் இந்தியப் பண்பாட்டையும் அறிந்துகொள்ளலாம்.           மனிதகுல வரலாற்றைப் பற்றி  ஜார்ஜ் தாம்சன்  என்பவர் எழுதிய நூலையும் நான் படித்திருக்கிறேன். ஆயினும்  ‘வால்கா முதல் கங்கை வரை’  நூலில் மனிதகுல வரலாறு தொடங்கி இந்தியாவில் காந்தியடிகளுக்கும் அம்பேத்காருக்கும் நடந்த...