இடுகைகள்

கவிதை முதல் கவிதை வரை…!

படம்
தமிழ் இலக்கிய வரலாறு இரண்டாயிரம் ஆண்டுப் பழைமை உடையது. சங்ககாலம் தொடங்கி இருபத்தியோராம் நூற்றாண்டுவரை, கவிதையானது தமிழரின் இலக்கிய வாழ்வில் முக்கியமானதொரு இடத்தைப் பெற்று வருகிறது.                குறிப்பாகச் சொல்வதானால், ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆளத் தொடங்கியபிறகு இந்தியாவில் தமிழகத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.                அறிவியல் வளர்ச்சி, புகைவண்டிகள், கார்களின் வருகை, அணைக்கட்டுகள் போன்ற மாற்றங்களோடு  ‘ உரைநடை’  என்னும் புதிய இலக்கிய வகை, தமிழ் இலக்கிய உலகில் அறிமுகமாகத் தொடங்கியது.                ஆங்கிலேயரின் வருகைக்குமுன் தமிழில் எல்லாச் செய்திகளும் செய்யுட்களில், கவிதைகளில், பாடல்களில்தான் இருந்திருக்கின்றன என்பது ஒரு அதிசயமான செய்தியாகும்.                கல்வெட்டுகள்,...

எழுத்துலகின் நகைச்சுவை வேந்தர் – தேவன்…!

படம்
நான் சிறுபிள்ளையாக இருந்தபோது, துப்பறியும் கதைகளையும் நகைச்சுவைக் கதைகளையும் விரும்பிப் படிப்பேன். அப்படி நகைச்சுவைக் கதைகளில் நான் அதிகம் விரும்பிப் படித்தது யாருடைய எழுத்து என்றால்,  மகாதேவன்  என்ற இயற்பெயர் கொண்டு  ஆனந்த விகடனில்  எழுதிவந்த  திரு.தேவன்  அவர்களுடைய கதைகள்தான் என்னைப் பெரிதும் ஈர்த்தன. அப்போதெல்லாம் புத்தகம் வாங்குவதற்குப் பணவசதி இருக்காது. தொடர்கதைகளை நண்பர் வீடுகளிலும், தொகுப்புப் புத்தகங்களை நூலகங்களிலும் சென்று படிப்பது எனக்கு வழக்கம். ஒருநாள் தேவன் அவர்களுடைய  ‘மைதிலி’  என்ற கதையை நான் நூலகத்தில் மனதிற்குள் படித்துக்கொண்டிருந்தபோது அதில் வந்த நகைச்சுவைக் காட்சிகளைப் படித்துவிட்டு சத்தம்போட்டு சிரித்துவிட்டேன். அங்கே படித்துக்கொண்டிருந்தவர்கள் என்னைக் கோபத்தோடு பார்க்க, நூலகர் வந்து ‘இப்படியெல்லாம் நூலகத்தில் சிரிக்கக்கூடாது’ என்று மிரட்டிவிட்டுப் போனார். அப்படி என்னை சிரிக்கவைத்த அந்தப் புத்தகம்போலவே  ‘கோமதியின் காதலன்’, ‘துப்பறியும் சாம்பு’, ‘சிஐடி சந்துரு’, ‘மிஸ்டர் வேதாந்தம்’  என்ற கதைகளையும் சொல்லிக...

நாடகமே உலகம்….

படம்
நாம் மக்களுக்காகத்தானே நடிக்கிறோம், நாம் நாடகத்தில் திரையில் சொல்லுகின்ற செய்திகளைப் பலர் பின்பற்றுவதில்லையே, என்ன செய்வது? “இது பல கலைஞர்கள் சொல்லும் குற்றச்சாட்டு”.                நாடகக் கலைஞர்களும்கூட இப்படிச் சொல்கிறார்கள். இருந்தாலும் பார்வையாளர்களுடைய ரசனையை எடைபோட நாடகக் கலைஞர்கள் பயிற்சி எடுத்திருக்க வேண்டும். நல்ல விஷயங்களாக இருந்தாலும் அதை கொடுக்க வேண்டிய முறையில் கொடுத்தால்தான் ரசிகர்கள் ரசிப்பார்கள். தமிழ்நாட்டில் அந்தக்காலத்தில் (திரைப்படங்கள் அதிகம் தயாரிக்கப்படுவதற்கு முன்பாக, மேடை நாடகங்கள் மூலம் சாதனை செய்தவர்களைப் பற்றி சற்றே சிந்திப்போம்)                புராண நாடகங்கள் மூலம் புகழடைந்த  ஆர். எஸ். மனோகர்  செய்த சாதனைக்கு ஈடேது. மதுரையில்  நவாப்  ராஜ  மாணிக்கம்  பிரம்மாண்டமான அரங்க அமைப்பு மூலம் தனது நாடகங்களைப் பார்க்க வைத்தாரே! அவர் நாடகத்தில் ஐயப்பன் கோவில் என்றால் பிரமாதமாக ‘செட்’ போட்டுவ...

ரயிலே…. ரயிலே…

படம்
இன்றைக்கும் ரயில் என்றாலே உற்சாகம்தான். அதிலும் ரயில் ஸ்டீம்என்ஜினாகப் புகைவிட்டுக்கொண்டு குப்…குப்… என்று கிளம்பி, வேகம் எடுத்துச் செல்வதைப் பார்க்கையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஒரே ஆனந்தம்தான்.                நீராவியின் சக்தியை அறிந்த  ‘ ஜேம்ஸ்  வாட்டும்’ , நீராவி என்ஜினைக் கண்டுபிடித்த  ‘ ஜார்ஜ்  ஸ்டீபன்ச’ னும்  இன்றைய நவீன ரயிலை நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.                அதிலும், நம்மூரில் மரவட்டைக்குப் பெயர், ரயில் வண்டிப்பூச்சி. சிறுவர்கள் விளையாடும் விளையாட்டிற்குப் பெயர் ரயில் விளையாட்டு என்று, ரயில் நம் வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட ஒரு உயிர்ப் பொருளாகிவிட்டது.                அந்தக்காலத்தில்  ‘ நல்லதம்பி ’ படத்தில் கலைவாணர் N.S.கிருஷ்ணன் அவர்கள் ‘நந்தனார்’ என்ற பழைய கதையை காலத்திற்கேற்ப மாற்றி, ‘க...

படங்களும்… பாடங்களும்…

படம்
கவிதைகள், நாடகங்கள், சிறுகதைகள், திரைப்படங்கள், புத்தகங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், சிற்பங்கள், ஓவியங்கள், இசை என படைக்கப்படுகின்ற எல்லாமே பொழுது போக்குவதற்காகவா? அல்லது பயன்பாட்டிற்காகவா? அதாவது கலை என்பது கலைக்காகவா? மக்களுக்காகவா? என்ற பட்டிமன்றத் தலைப்பு ஒன்று வெகுகாலமாகவே, ரசிகர்கள், படைப்பாளிகள், விமர்சகர்கள் மத்தியில் காரசாரமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது.                ‘எந்த ஒரு படைப்பும் ஏதாவது ஒரு பயனைத் தரவேண்டும்’ என்கின்றனர் சிலர்.                ‘படைப்பை ரசித்து மகிழ வேண்டுமே, தவிர, ஆராய்ச்சி செய்து குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது’ எனச் சொல்கின்றனர் சிலர்.                உதாரணமாக, ஒரு செடியில், வாசனை பொருந்திய, வண்ணங்கள் நிறைந்த மலர் பூத்திருக்கிறது என்றால் அதனை ரசிக்க வேண்டும். ரசனைதான் முக்கியம் என்று சிலர் சொல்ல… அந்தப் பூ பூப்பதே காயாகிப், பழமாகி, விதை ...

இலக்கியங்கள் என்ன செய்யும்?…

படம்
ஒருநாள் கல்லூரியில் சிறப்புத்தமிழ் படிக்கின்ற மாணவர்களுக்காக வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தேன். ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னிடத்தில் கேட்கலாம் என்று சொன்னேன். யாரும் பேசவில்லை, வகுப்பில் மயான அமைதி நிலவியது.                பிறகு நான் அவர்களை நோக்கிப், பாடம் தொடர்பாக வேண்டாம். பொதுவான சந்தேகங்கள் எதுவானாலும் கேளுங்கள் என்று  சொன்னவுடன், ஒரு மாணவி எழுந்தாள்… “ஐயா, எம்.பி.பி.எஸ் படிக்கும் மாணவர் டாக்டர் ஆகிறான். பொறியியல் படிப்பவர்கள் இன்ஜினியர் ஆகிறார்கள். சட்டம் படிப்பவர்கள் நீதிபதியாக, வழக்கறிஞராக ஆகிறார்கள். தமிழ் படிப்பதால் என்ன லாபம், இலக்கியம் படித்தால் என்ன ஆகலாம்?” என்று அந்தப் பெண் கேட்டவுடன் வகுப்பே கலகலப்பானது. நான் சற்று அதிர்ச்சியடைந்தேன்.                ஏனென்றால் பொதுவாக எந்த வழியும் இல்லாதவர்கள் வேறு வழி இல்லாமல் கடைசி முயற்சியாக இலக்கியத்தில் வந்து சேருவது போலவும், மொழிப் பாடங்கள் படிப்பது பயன் அற்றது போலவும், ஒரு கரு...

பனையோலைகளும்… புதிய வலைதளங்களும்…

படம்
      உலகப் புத்தகத் திருநாள் மனித வர்க்கத்தின் அறிவுத்திருநாள் என்றே சொல்லலாம். ஒவ்வொரு புத்தக நூல்நிலையமும், அறிவுத் திருக்கோயில்கள்தாம்.                மனிதனின் கண்டுபிடிப்புகளிலேயே மிகச்சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம்தான் என்கின்றார் ஒரு மேல்நாட்டு அறிஞர். இத்தகைய புத்தகங்கள் ஒருகாலத்தில் ஓலைகளில் எழுதப்பட்டு வந்தன. அந்த ஓலைகளைத் தமிழ் கற்ற சான்றோர்களும், ஆன்மீகத் திருமடங்களும் பேணிப் பாதுகாத்து வந்தன.                புலவர்களும், எழுத்தாணி கொண்டு பனைஓலைகளில் எழுதும் பயிற்சி உடையவர்களும் இருந்ததால் இப்பனைஓலைகள் காலங்காலமாய் படியெடுக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டன. அதுவும் அந்தக்காலங்களில் புள்ளி எழுத்துக்கள் கிடையாது. நெடில் குறில் வேறுபாடுகளைப் பிரித்தறிவது கடினமாக இருந்தது. வீரமாமுனிவர் போன்ற மேல்நாட்டு கிறித்தவப் பாதிரிமார்கள் தமிழ்கற்று எழுத்துச் சீர்திருத்தம் செய்து  ‘ சதுரகராதி’  எனும் அகராதியை உருவாக்கித் தம...