புழுங்கலரிசி எந்த நெல்லில் இருந்து உருவாகுது?
பச்சரிசி எந்த நெல்லில் இருந்து உருவாகுது ? புழுங்கலரிசி எந்த நெல்லில் இருந்து உருவாகுது ? சொல்லுங்க…’ ஒருநாள் வகுப்பில் இதை நான் கேட்டபோது, உட்கார்ந்திருந்த மாணவர்களில் 35 மாணவர்களுக்கு விடை தெரியவில்லை. ‘பச்சரிசி ஒரு மாதிரியான பயிர்’ என்று சொன்னான் ஒரு மாணவன். பலர் சத்தியமாகத் தெரியாது என்று சொல்லிவிட்டார்கள். அரிசியை அவித்தால் புழுங்கல், அப்படியே விட்டால் பச்சரிசி என்பது கூடத் தெரியாததற்குக் காரணம் – விவசாயத்திற்கும் இன்றைய மாணவனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒரு நெல் எப்படி விளைகிறது? நெல்லில் இருக்கிற வகை என்ன? விதை பாவுவது, நாற்று நடுவது, களை எடுப்பது என்று ஏதாவது தெரிய வைத்திருக்கிறோமா? அடிப்படையில் நமது நாடு விவசாய நாடு என்று சொல்கிறோம். ஆனால் நம்முடைய கல்வி...