இடுகைகள்

டைனிங் டேபிளில் சாப்பிட்ட குரங்கு…

படம்
“ வாய்விட்டுச்  சிரித்தால்  நோய்  விட்டுப்  போகும்”  என்று சொல்வார்கள். இவை பொய்யில்லை. மிகையுமில்லை.                வெவ்வேறு அளவில் மனஅழுத்தங்கள் இன்றைக்கு அதிகரிக்கின்றன. இளைஞர்களில் பலருக்கும் மன அழுத்தங்கள் இருக்கின்றன. சிரிக்கத் தெரிந்தால் இந்த மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.                வெளிநாட்டில் ஆபரேஷனுக்கு முன்பு ஒருவருக்கு மயக்க மருந்து கொடுக்கப் போனார்கள். அவர் மறுத்துவிட்டு ‘வேண்டாம்… சார்லி சாப்ளின் படத்தைப் போடுங்கள் போதும்’ என்றிருக்கிறார். அதன்பிறகு ஆபரேஷன் நடந்திருக்கிறது. நகைச்சுவையின் வலிமை அது.                கேன்சராலோ, எய்ட்ஸாலோ பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முன்னால் ஒரு அமைப்பைச் சேர்ந்தவர்கள் ‘பபூன்’ போல வேஷம் போட்டு வித்தைகள் காட்டியபோது, அந்தக் குழந்தைகள் அப்படியொரு சிரிப்புச் சிரித்தார்களாம்.     ...

பேசும் கலை வளர்ப்போம்…!

படம்
வெளிநாடுகளில் ஆரேட்டிரிக் பேச்சுப் பயிற்சியைக் கூட ஒரு பாடத்திட்டமாக வைத்திருக்கிறார்கள். ‘இதைப் போய்ப் பாடமாக வைக்க வேண்டுமா?’ என்கிறோம். ஆனால், எதை எந்தச் சமயத்தில் யாரிடம்… எப்படிப் பேச வேண்டும் என்பதை இங்கு நாம் கற்றுத் தருகிறோமா? பள்ளிக்கூடமொன்றில் ஒரு கூட்டம். மாவட்ட ஆட்சித்தலைவர் மேடையில் உட்கார்ந்திருந்தார். எட்டாவது வகுப்பு படிக்கிற ஒரு மாணவியை வரவேற்புரை பேசச் சொன்னார்கள். மனப்பாடம் செய்து மேடையேறிய அந்தப் பெண்ணுக்கு பேச்சு மறந்து போய்விட்டது.  ‘மாவட்ட ஆட்சித்தலைவரை நான் பாராட்டி… சீராட்டி… குளிப்பாட்டி…’ என்று தடுமாற்றத்துடன் பேசிக்கொண்டே போக, நெகிழ்ந்து போனார் மாவட்ட ஆட்சித்தலைவர். முன்னாலிருந்த மாணவர்கள் எல்லாம் தாங்க முடியாமல் சிரித்தார்கள். காரணம் பேச்சில் பயிற்சி இல்லாததுதான். செந்தமிழும் நாப்பழக்கம். பேச்சு பழகப்பழகத்தான் வரும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பேச்சுக்கலையை ஒரு பாடமாகக் குறிப்பிட்ட நேரத்தில் சொல்லிக் கொடுத்தால், வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலுமே பயன்படும். என்ன பேசுகிறோம் என்பதைக் காட்டிலும், என்ன பேசக்கூடாது என்பது மிகமிக முக்கியம். யாரைய...

அடுத்த வீடே…. அயல்கிரகம்தான்…

படம்
                ‘ விருந்தே  புதுமை ’ என்கிறது தொல்காப்பியத்திலுள்ள ஒரு நூற்பா. அக்காவோ, தாத்தாவோ அல்லது நெருங்கிய உறவினர்களோ நம் வீட்டுக்கு வந்தால், அவர்கள் எல்லாம் விருந்தாளிகள் இல்லையாம். யாரோ முகந்தெரியாமல் வருகிற ஒருவரை வரவேற்று உபசரிப்பதற்குப் பெயர்தான் விருந்து.                நண்பர்களுக்கு விருந்தளிப்பது கடமை. உறவினர்களுக்கு விருந்தளிப்பது உரிமை. நம்மூரைப் பொறுத்தவரை, சிலப்பதிகாரத்திலும், கம்பராமாயணத்திலும் விருந்தைப் பற்றிச் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. திருவள்ளுவர் விருந்தோம்பலைப் பற்றித் தனி அதிகாரமே படைத்திருக்கிறார். வீட்டுக்கு வந்த விருந்தாளியைக் காக்க வைத்துவிட்டு அமிர்தமாக இருந்தாலும் சாப்பிடக்கூடாது என்கிறார் அவர்.                மழைக்காலத்தில் ஊருக்குள் நுழைகிறவன் அங்கு தங்கிக்கொள்ள முடியும் என்பதற்காகத்தான், கிராமப்புறங்களில் வீட்டுத்திண்ணை என்கிற ...

ஒரு நிமிஷம் பொறு…

படம்
ஒருமுறை  ‘திருஆவினன் குடி’  என்ற பழைய பெயர் கொண்ட பழனித் திருக்கோயிலின் குடமுழுக்கு நன்னீராட்டு (கும்பாபிேஷக) விழாவிற்கு, நேர்முக வர்ணனைக்காகப் போயிருந்தேன்.                அப்போது, அறுபடை வீடுகளில் ஒன்றாகிய அந்தப் பழனிமலை பற்றி கல்வெட்டுக்களில், இலக்கியங்களில், புராணங்களில், நாட்டுப்புறக் கதைகளில் கூறப்பட்டுள்ள செய்திகளைப் படித்துப் பார்த்து வியந்து போனேன்.                ‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்று ஒரு பழமொழி தமிழில் உண்டு. கோயில் அத்தனை முக்கியமானதா? என்றொரு கேள்வி எழுகிறது. தமிழர்களின்  அடையாளம் என்று பட்டியலிடும்போது, கோயில், நாதஸ்வரம், பரதம், தமிழிசை எனத் தங்களுக்கெனத் தனித்தன்மையை உருவாக்கிக் கொண்டவர்கள் தமிழர்கள்.                ஓர் அரசன், ஒரு கோயிலைக் கட்டும்போது, ஆயிரக்கணக்கான பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கிறது. இரண்டாவது,...

கேட்கப்படாத கேள்விகள்… சொல்லப்படாத பதில்கள்…

படம்
    என்னப்பா… சவுக்கியமா?’ என்று யாரையும் பார்த்ததும் நாம் பேசத்துவங்குவது ஒரு கேள்வியிலிருந்துதான்.                கேள்வி கேட்கும் மரபு வேதகாலத்துக்கு முன்பிருந்தே இருக்கிறது. அது புராணங்களிலும் இருக்கிறது. கேள்வி – பதில் பகுதியிருந்தால், குறிப்பிட்ட அளவுக்கு மேல் கேள்வி கேட்டால் தலை வெடித்து விடும் என்றும் சொல்லிப் பயமுறுத்துவார்கள்.                விக்கிரமாதித்தன் கதைகளில் மரத்தில் தொங்கும் வேதாளம்கூடக் கேள்வி கேட்கும். மகாபாரதத்தில் குருேஷத்திர யுத்தத்திற்கு முன்பு, கிருஷ்ணரிடம் அர்ஜுனன் கேட்கிற கேள்வியும் பதிலும்தானே பகவத்கீதை.                வில்லிபாரதத்தில் நச்சுப் பொய்கைச் சருக்கத்தில் ‘கேள்வி – பதில்’ பகுதி அவ்வளவு அருமையாக இருக்கும். அதில் ஒரு கேள்வி வரும். ‘உலகத்திலேயே வேகமானது எது?’ இதற்கு  ‘ மனம்’  என்று பதில் சொல்வான் தர்மன். அது போலவே...

உலகம் உங்களை அழைக்கிறது…

படம்
சுற்றுலா போவது என்பதே சந்தோஷம் தரும் விஷயம். இது வெளிநாடுகளில் பழக்கமான அளவுக்கு நம் நாடுகளில் பழக்கமாகவில்லை.                நாம் திருப்பதி, ராமேஸ்வரம், பழனி என்று “சேர்ந்து கொண்டு” ஆன்மிகத்தின் பெயரால் கோயில்களுக்குப் போய் வருகிறோம். மலைக்கு நடந்து போவது. இங்குள்ளவர்களுக்கு ‘உடற்பயிற்சி’யாகவும் இருக்கிறது.                பள்ளிகளில் மாணவர்களைச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லும்போது, ‘அந்தப் பக்கம் பார்க்காதே. இந்தப் பக்கம் நடக்காதே’ என்று சத்தம் கேட்கும். போலீஸ், கைதியை அழைத்துச் செல்கிற மாதிரி, மாணவர்களை அழைத்துச் செல்வார்கள் ஆசிரியர்கள். கொடைக்கானலுக்குச் சமீபத்தில் போயிருந்தேன். பள்ளி மாணவர்கள் சிலர், மவுன ஊர்வலம் போல சென்று கொண்டிருந்தனர்.                அப்புறம் ஓர் இடத்தில் அவர்களை உட்கார வைத்திருந்தார்கள். இதில் ஒரு பையன் சோகமாய் உட்கார்ந்திருந்தான். ‘என்னப்பா…...

சிரிப்பதே தியானம்தான்!

படம்
எப்போதும் ‘உம்;’ என்று முகத்தைக் காங்கிரீட் தனமாக வைத்துக் கொண்டிருப்பவரிடம் நெருங்கிப் பேசப் பலரும் யோசிப்பார்கள்.                கொஞ்சம் சிரித்த முகமாக இருப்பவர்களிடம் பேச யோசிக்க மாட்டார்கள். சட்டென்று பேச்சின்மூலம் நெருக்கம் உருவாகி விடும். சுற்றுலாவுக்குப் போகும்போது, கலகலப்பான ஒருத்தர் இருந்தால் அந்தச் சுற்றுலாவே கலகலப்பாக ஆகிவிடும். அதற்காகவே அவருக்காகக் காத்திருந்து அவருடைய சவுகர்யத்திற்கேற்ப சுற்றுலா போகிறவர்களும் இருக்கிறார்கள்.                சில கனமான சந்தர்ப்பங்களையும் நகைச்சுவை கலந்த பேச்சு திசை மாற்றிவிடும். வின்சென்ட் சர்ச்சில் சீரியஸாக எதைப் பற்றியோ மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது கீழே இருந்த ஒருவர், காகிதத்தில் ‘முட்டாள்’ என்று எழுதி, சர்ச்சிலிடம் கொடுத்து அனுப்பியிருக்கிறார்.                அதை வாங்கிப் பார்த்த சர்ச்சில் சொன்னார், ‘யாரோ ஒரு கனவான் அவ...