இடுகைகள்

பிட்டுக்கு மண் சுமந்த (சிவ)பெருமான்…

படம்
                    பண் சுமந்த பாடல் பரிசு படைத்தருளும் பெண் சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான் விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன் கண் சுமந்த நெற்றிக் கடவுள் கலி மதுரை மண் சுமந்த கூலி கொண்டு அக் கோவால் மொத்துண்டு புண் சுமந்த பொன் மேனி பாடுதும் காண் அம்மானாய்                               -திருவாசகம் - அம்மானை மதுரை அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் பெருமையுடையதாகவே திகழ்ந்து வருகிறது. புராணம், இலக்கியம், வரலாறு, புதுமையை ஏற்றல் எனக் காலமாறுதல்களுக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் தகுதியுடையது இம்மதுரை.      மற்றைய ஊர்களின் மண்ணுக்கும் மதுரை மண்ணுக்கும் உள்ள வேறுபாடு என்ன தெரியுமா? பிறஊர்களின், நாடுகளின், தேசங்களின் மண்ணில் இறைவன் பிறந்தார், இருந்தார், நடந்தார் என அறிந்திருக்கிறோம். ஆனால் மதுரை மண்ணைத்தான் திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளாகிய சிவபெருமான் தன் தலையில் சுமந்தார் என்ற பெருமை இம்மண்ணுக்கு உண்டு...

கண்ணன் எனும் பழைமையான கடவுள்…

படம்
        ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்        ஒருத்தி மகனாய் ஓளித்து வளர      தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த      கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்      நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை      அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்      திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி     வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்… திருமாலின் பத்து அவதாரங்களுள் கிருஷ்ணாவதாரமே முழுமைபெற்ற அவதாரமாகக் குழந்தை முதல் முதியவர் வரை அனைவரையும் ஈர்க்கும் கடவுளாகப் போற்றப்படுகிறார்.  தொல்காப்பியத்தில் ஐவகை நிலங்களும் அந்நிலங்களுக்குரிய கடவுளர்களுமாகச் சொல்லப்படும்போது  “மாயோன் மேய காடுறை உலகமும்” என முல்லை நிலத்திற்குரிய கடவுளாகக் கண்ணபிரான் கூறப்படுகிறார்.  பன்னிரு ஆழ்வார்களும் அவர்களில் ஒருவராகிய ஆண்டாளும் மேற்குறித்த பத்து அவதாரங்களுள் கிருஷ்ணாவதாரத்தையே மகிழ்ந்து மகிழ்ந்து பாடுகின்றனர்.  மகாகவி பாரதியாரும் ‘கண்ணன் பாட்டு’ எனும் தனி இலக்கிய வடிவ...

நிதானமாய்க் குளிப்பதும் தியானம்தான்…

படம்
‘அந்தக் காலத்திலே அப்போ எப்படி இருந்துச்சு தெரியுமா?’ இப்படி ஒப்பிட்டுச் சொல்லி, அலுத்துக் கொள்பவர்கள் நிறையப் பேர் நம்மிடையே இருக்கிறார்கள். காலமாற்றத்தை நாம் எப்படி உணர்கிறோம் என்பது முக்கியம். இரண்டாயிரம் வருஷமாக நிதானமாக நகர்ந்த வளர்ச்சியை நவீனத் தொழில் நுட்பம், கடந்த பத்திருபது ஆண்டுகளுக்குள் புகுந்து முழுக்க மாற்றியமைத்து விட்டது. நாங்கள்கூட பட்டிமன்றத்தில் விளையாட்டாக இப்படிச் சொல்வோம். ‘முன்னாடி மாவாட்டும்போது உரல் அப்படியே இருக்கும், குழவி சுற்றும். இப்போது குழவி அப்படியே இருக்கிறது கிரைண்டரில், உரல் அதைச் சுற்றுகிறது. இது இந்தக் காலம். விளம்பரங்களில்கூட இப்போது மாற்றம். முன்பு பெண்கள் அறையில் குளிக்க, ஆண்கள் காற்றாடக் குளிப்பார்கள். குறிப்பிட்ட ஒரு சோப் விளம்பரத்தில் ஆண் பாத்ரூமில் குளிக்கிறான். இன்னொரு விளம்பரத்தில் ஒரு பெண் நீர்வீழ்;ச்சியில் அட்டகாசமாகக் குளிக்கிறாள். இது இந்தக் காலம். அரசியலிலுள்ள மாற்றத்தைப் பற்றி தமிழ் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் பேசினார்.  முன்பு சாக்பீசால் எழுதிப் போடப்பட்ட கரும்பலகையைப் பார்த்துப் படித்த குழந்தைகள்,...

நூலகமே கோவில்….

படம்
  ‘ஒரு நூலகம் திறக்கப்படுகிறபோது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன’ என்பது ஆன்றோர் வாக்கு. இது உண்மையா! என்று பலர் யோசிக்கலாம். நான் சந்தித்த ஒரு அனுபவத்தை உங்களுக்குச் சொல்லுகிறேன்.  ஒரு சுதந்திர தினத்தன்று மதுரையில் மத்திய சிறைச்சாலையில் சிறப்பு நிகழ்வுக்காக என்னைப் பட்டிமன்றம் பேச அழைத்திருந்தார்கள். இதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால், சிறையில் இருக்கின்ற சிறைவாசிகளையே பேச்சாளர்களாகப் போட்டுக்கொள்ளலாம் என்று நான் சொன்னபோது அப்போது சிறைக்காப்பாளராக இருந்த அதிகாரி மிக்க மகிழ்ச்சியடைந்து ‘ஐயா நீங்க நடுவரா வாங்க நான் பேச்சிலே ஆர்வமுள்ள ஆறுபேரை தேர்வு பண்ணி வைக்கிறேன்’ என்றார்.  அதேபோல கூட்டம் தொடங்கியது. வரவேற்புரை முடிந்தபிறகு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நான் முன்னுரை சொல்லியபிறகு அதில் கலந்துகொண்டவர்கள் ஒவ்வொருவராகப் பேசத் தொடங்கினார்கள். ஆச்சர்யம் அவர்களைச் சிறைவாசிகள் என்றோ, ஏதோ ஒரு குற்றத்திற்காகத் தண்டனை பெற்று வந்தவர்கள் என்றோ சொல்ல முடியாதபடி அவ்வளவு சிறப்பாகப் பேசினார்கள். அதில் இரண்டுபேர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களையும் பலரும் வியக்கும் வண்ணம் ப...

மீண்டும் பிறப்பேன்… குதிராம் போஸ்…

படம்
  பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கல்கத்தா தமிழ்ச்சங்கத்தின் அழைப்பின்பேரில் நாங்கள் எங்கள் பட்டிமன்றக் குழுவோடு கல்கத்தா சென்றிருந்தோம். நிகழ்ச்சி முடிந்தபிறகு கல்கத்தாவின் பல இடங்களைச் சுற்றிப் பார்த்தோம்.  அதில் முக்கியமாக எங்களைக் கவர்ந்தது விக்டோரிய மகாராணியின் அரண்மனையும் (Victoria Memorial) அதில் அமைந்திருந்த அருங்காட்சியகமும்தான் (Indian Museum) . நாங்கள் அந்த அருங்காட்சியகத்தில் பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப்பொருட்களையும் ஓவியங்களையும் பார்த்துக்கொண்டு வந்தோம்.  அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான ஓவியங்களில் ஒன்று என்னைச் சற்றுநேரம் திகைக்க வைத்தது. அந்த ஓவியத்திலிருந்த இளைஞனைப் பற்றி நான் பலமுறை மேடைகளில் பேசியிருக்கிறேன், பலர் பேசக் கேட்டிருக்கிறேன்.  18வயதே ஆன அந்த இளைஞர், அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவின் நிலையை எண்ணி வருந்தி, அதற்கு மாற்று ஆயுதப்புரட்சிதான் என்று துணிந்து பல்வேறு செயல்களை ஆங்கிலேயருக்கு எதிராகச் செய்துவந்தார். அதன்காரணமாகக் கைது செய்யப்பட்டார். அவருக்குத் தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டது.  நாளை விடிந்தால் அவருக்க...

ஆடிப்பட்டம் தேடி விதை…

படம்
  நம் பண்டையத் தமிழர்கள் பன்னிரெண்டு மாதங்களை ஆறு பருவங்களாகப் பிரித்து வைத்திருந்தார்கள். இதற்குப் பெரும்பொழுது என்று பெயர். அந்த ஆறு பருவங்கள் எவை என்றால்,  1. சித்திரை, வைகாசி - இளவேனில் 2. ஆனி, ஆடி - முதுவேனில் 3. ஆவணி, புரட்டாசி  - கார்காலம் 4. ஐப்பசி, கார்த்திகை - கூதிர்காலம் 5. மார்கழி, தை - முன்பனிக்காலம் 6. மாசி, பங்குனி - பின்பனிக்காலம் என்பவையாகும். முதுவேனிற் காலமாகிய இந்த ஆடிமாதத்தில்தான் சூரியன் தெற்குநோக்கி நகர்கின்ற தட்சிணாயணக் காலம் வருகின்றது. இதே சூரியன் தை மாதம் தொடங்கும்போது வடக்குநோக்கி நகர்வதால் அது உத்திராயணக் காலம் என அழைக்கப்படுகிறது.  ஆடி மாதத்தைப் பொறுத்தவரை பல்வேறு சிறப்புகள் இம்மாதத்திற்கு உண்டு. மழைக்குரிய பருவகாலம் தொடங்கவிருப்பதால் ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்பது விவசாயிகளின் பேச்சு வழக்கு. இந்த ஆடிமாதத்தில் காற்று தொடர்ந்து வீசுவதால் ‘ஆடிக்காத்துல அம்மியும் பறக்கும்’ என்பது கிராமத்துப் பழமொழி.  வேளாண்மை தொடங்குகின்ற காலமாதலால் பணப்புழக்கம் குறைவாக இருக்கும், விவசாய வேலைகள் தொடங்கி இருக்கும். இதனால்தானோ ...

கழுகுமலையும்… எல்லோரா குகைக்கோயிலும்…

படம்
               தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சித்தன்னவாசல் மலைக்குகையில் அமைந்துள்ள சமணப்பள்ளிக்குப் போயிருந்தபோது அங்கிருந்த ஓவியங்களைப் பார்த்தும் நான் வியந்துபோனேன். இந்த வண்ணங்கள் எங்கிருந்து கிடைத்தன? என்று நான் கேட்டபோது, அங்கு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஒருவர் எனக்கு அந்த அதிசயத்தைக் காண்பித்தார்.                என்னை அழைத்துக்கொண்டு அந்தக் மலைகுகைக்கு அருகிலிருந்த சின்னக் காட்டுக்குள் போனார். ஏதோ ஒரு மூலிகை போன்ற செடியிலிருந்து சில பச்சை இலைகளைப் பறித்து அதைக் கசக்கி என் கைகளில் அவர் தடவ, என் கை மருதாணி வைத்ததுபோலச் சிவந்து போனது. அவர் கையும் சிவப்பானது.                ‘இந்தக் கலரு மூணு நாளைக்கு உங்க கையில இருக்கும்’ என்று அவர் பெருமையாகச் சொல்லியதோடு, இது மாதிரி ஆயிரக்கணக்கான செடிகள் இந்தப் பகுதியில் இருக்கின்றன. இவற்றின் சாறுகளை வைத்துதான் குகைக்குள் இருக்கின்ற ...

அஜந்தா ரகசியம்…

படம்
    சென்ற மே மாதத்தில் டில்லி மற்றும் புனே தமிழ்ச்சங்கங்களின் அழைப்பின்பேரில் நானும் என் துணைவியாரும் அங்கு சென்றுவிட்டு புனேயிலிருந்து ஷுரடிக்குப் போய் பாபாவையும் தரிசித்துவிட்டு எனது அன்பிற்குரிய தம்பி மகன் கணினிப் பொறியாளர்  திருமிகு.  ரவி  மற்றும் அவர்கள் குடும்பத்தாரோடு  எல்லோரா,  மற்றும்  அஜந்தா  போன்ற இடங்களுக்குச் சென்று வந்தோம்.                  ‘ சிவகாமியின்  சபதம்’  நாவலை நான் சிறுபிள்ளையாக இருந்தபோது படிக்கத் தொடங்கி, இன்றுவரை படித்து வருகிறேன். அதில் கதாநாயகியாகிய சிவகாமியின் தந்தையான  ஆயனசிற்பி  அஜந்தா ஓவியங்களின் வர்ண ரகசியத்தை அறிந்துகொள்ள அந்த நாவல் முழுவதும் முயற்சிப்பார்.  மகேந்திர  பல்லவன்,  நரசிம்ம  பல்லவன்,  அவர்களின்  தளபதி  பரஞ்சோதியார் ( பிற்காலத்தில்  இவர்தான் 63 நாயன்மார்களில்  ஒருவராகிய  சிறுத்தொண்டர்)  ஆகியோர் மூலமெல்லாம் அந்த ரகசியத்தைத் தெரிந்துகொள்ள மு...

எல்லா உயிரும்…நம் உயிர் தான்…

படம்
                வீட்டில் ஏதாவது ஜீவன்களை வளர்ப்பது இயல்பான விஷயம். அதனைப் பற்றிச் சொல்வதற்கு முன், ஒரு விஷயத்தைச் சொல்கிறேன்.                சின்னப்பையன் ஒருவன் பள்ளிக்கூடத்துக்குப் போயிருந்த சமயத்தில், அவன் ஆசையாக வளர்த்து வந்த மைனா இறந்துவிட்டது. சாயங்காலம் அவன் வீட்டுக்கு வந்ததும், தயங்கியபடி அம்மா அவனிடம் சொன்னாள். அவனோ விளையாடப் போய்விட்டான். விளையாடித் திரும்பியவன் மைனா எங்கே? என்றான். டேய் அப்பவே சொன்னேன். தெரியலையா? அது செத்துப் போச்சு என்றாள் அம்மா.                பையன் உடனே புரண்டு புரண்டு அழுதான்.                அவனைத் தூக்கி நிறுத்தி, ஒரு அடி கொடுத்தாள் அம்மா.                டேய் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் செத்துப் போச்சுன்னு சொன்னேனே… உடனே விளையா...

உன்னையே நீ உணர்வாய்…

படம்
               புராணங்களில் வரும் அனுமன், பீமன், கடோத்கஜன் ஆகியோருக்கு இன்றும் சிறுவர்களிடமும், இளைஞர்களிடமும் தனிமரியாதை உண்டு. இன்றைக்கு சக்திமான் ஸ்பைடர்மேன், ஹீமேன் மாதிரி அக்காலத்தில் அவர்கள் இருந்தனர்.                எல்லா மனிதர்களும் வலிமை உள்ளவர்களே. ஆனால் தன் பலத்தை அறியாததுதான் அவர்களின் குறை!                ஒருமுறை சென்னையில் ஓர் இளைஞர் கைகளால் தொடாமல் தன் பற்களாலேயே தண்ணீர்ப் பானையைத் தூக்கி ஒரு சுற்று சுற்றிக் கீழே வைத்தார்.                கோவையில் ஒருவர் தன் தலைமுடியில் லாரியைக் கட்டி இழுத்துக் கட்டினார்.                சிலருக்கு மட்டும் பற்களும், தலைமுடியும் அவ்வளவு வலிமை வாய்ந்ததாக இருக்கிறதே எப்படி?        ...

காலத்தை வென்ற கவிஞர் கா.மு.ஷெரீப் .…

படம்
தமிழ்த் திரையுலகம் 1931ஆம் ஆண்டு பாட்டோடுதான் பேசத் தொடங்கியது. எனவே இன்றைக்குவரைக்கும் தமிழ்த் திரைப்படங்களில் பாடல் என்பது ஒரு பிரிக்க முடியாத அங்கம். இப்பாடலை தொடங்கி வைத்த பிதாமகர் என்ற பெருமை தமிழ்ப்பாடல் உலகின் பிதாமகர் பாபாநாசம் சிவன் அவர்களையே சாரும். அவரைத் தொடர்ந்து உடுமலை நாராயணகவி, கு.ம.பாலசுப்பிரமணியன், கு.ச.கிருஷ்ணமூர்த்தி, என்ற வரிசையில் தனக்கென ஒரு தனியிடத்தை வகுத்து அதில் தடம் பதித்தவர் கவிஞர் .  கா.மு.ஷெரீப் அவர்கள். தமிழ்த் திரையுலகில் தத்துவப் பாடல்களானாலும், காதல் பாடல்களானாலும் அப்பாடல்களில் இவரின் கற்பனை வளம் நெஞ்சை நிறைக்கும். சந்த நயம் செவியில் இனிக்கும்.                                ‘தொட்டால் மணக்கும் ஜவ்வாது                                சுவைத்தால் இனிக்கும் தேன்பாகு         ...

செம்மொழி நாயகர்…பரிதிமாற் கலைஞர்…!

படம்
மதுரை மாநகரம் ஈராயிரம் ஆண்டுப் பழைமையோடும் குன்றாத பெருமையோடும் இன்றும் திகழ்ந்து வருகிறது. முச்சங்கங்கள் தோன்றியது இம்மதுரையில்தான். மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனார் போன்ற சங்கப்புலவர்கள் வாழ்ந்ததும் இம்மதுரையில்தான். இதன் தொடர்ச்சியை இருபத்தியோராம் நூற்றாண்டிலும் காண்கிறோம். மதுரையின் பெருமையை உலகறியச் செய்ததோடு தமிழ் உயர்தனிச் செம்மொழிதான் என முதலில் முழக்கமிட்டவர் பரிதிமாற் கலைஞர். இவர் 1870ஆம் ஆண்டு மதுரைக்கு அருகிலுள்ள விளாச்சேரி என்ற சிற்றூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் சூரிய நாராயண சாஸ்திரி. இவர் தம் தந்தையிடம் சமஸ்கிருதமும், மதுரைச் சபாபதி முதலியாரிடம் தமிழும் கற்றார். மதுரை உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். (தற்போது மதுரைக் கல்லூரி) உயர்தனிச் செம்மொழி தமிழென்றும், வடமொழிக்கு முந்திப் பிறந்தது தமிழென்றும் உலகுக்கு அறிவித்தவர் பரிதிமாற் கலைஞர். பிரித்தானியரால் திணிக்கப்பட்ட ஆங்கிலமொழிக்கு தமிழர்கள் அடிபணியக்கூடாது என்றும் ஆணித்தரமாக வாதுரை செய்தவர் நம் பைந்தமிழ் வளர்த்த பரிதிமாற் கலைஞர் ஆவார். பரிதிமாற் கலைஞர் ஒரு தமிழாசிர...

டைனிங் டேபிளில் சாப்பிட்ட குரங்கு…

படம்
“ வாய்விட்டுச்  சிரித்தால்  நோய்  விட்டுப்  போகும்”  என்று சொல்வார்கள். இவை பொய்யில்லை. மிகையுமில்லை.                வெவ்வேறு அளவில் மனஅழுத்தங்கள் இன்றைக்கு அதிகரிக்கின்றன. இளைஞர்களில் பலருக்கும் மன அழுத்தங்கள் இருக்கின்றன. சிரிக்கத் தெரிந்தால் இந்த மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.                வெளிநாட்டில் ஆபரேஷனுக்கு முன்பு ஒருவருக்கு மயக்க மருந்து கொடுக்கப் போனார்கள். அவர் மறுத்துவிட்டு ‘வேண்டாம்… சார்லி சாப்ளின் படத்தைப் போடுங்கள் போதும்’ என்றிருக்கிறார். அதன்பிறகு ஆபரேஷன் நடந்திருக்கிறது. நகைச்சுவையின் வலிமை அது.                கேன்சராலோ, எய்ட்ஸாலோ பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முன்னால் ஒரு அமைப்பைச் சேர்ந்தவர்கள் ‘பபூன்’ போல வேஷம் போட்டு வித்தைகள் காட்டியபோது, அந்தக் குழந்தைகள் அப்படியொரு சிரிப்புச் சிரித்தார்களாம்.     ...

பேசும் கலை வளர்ப்போம்…!

படம்
வெளிநாடுகளில் ஆரேட்டிரிக் பேச்சுப் பயிற்சியைக் கூட ஒரு பாடத்திட்டமாக வைத்திருக்கிறார்கள். ‘இதைப் போய்ப் பாடமாக வைக்க வேண்டுமா?’ என்கிறோம். ஆனால், எதை எந்தச் சமயத்தில் யாரிடம்… எப்படிப் பேச வேண்டும் என்பதை இங்கு நாம் கற்றுத் தருகிறோமா? பள்ளிக்கூடமொன்றில் ஒரு கூட்டம். மாவட்ட ஆட்சித்தலைவர் மேடையில் உட்கார்ந்திருந்தார். எட்டாவது வகுப்பு படிக்கிற ஒரு மாணவியை வரவேற்புரை பேசச் சொன்னார்கள். மனப்பாடம் செய்து மேடையேறிய அந்தப் பெண்ணுக்கு பேச்சு மறந்து போய்விட்டது.  ‘மாவட்ட ஆட்சித்தலைவரை நான் பாராட்டி… சீராட்டி… குளிப்பாட்டி…’ என்று தடுமாற்றத்துடன் பேசிக்கொண்டே போக, நெகிழ்ந்து போனார் மாவட்ட ஆட்சித்தலைவர். முன்னாலிருந்த மாணவர்கள் எல்லாம் தாங்க முடியாமல் சிரித்தார்கள். காரணம் பேச்சில் பயிற்சி இல்லாததுதான். செந்தமிழும் நாப்பழக்கம். பேச்சு பழகப்பழகத்தான் வரும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பேச்சுக்கலையை ஒரு பாடமாகக் குறிப்பிட்ட நேரத்தில் சொல்லிக் கொடுத்தால், வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலுமே பயன்படும். என்ன பேசுகிறோம் என்பதைக் காட்டிலும், என்ன பேசக்கூடாது என்பது மிகமிக முக்கியம். யாரைய...

அடுத்த வீடே…. அயல்கிரகம்தான்…

படம்
                ‘ விருந்தே  புதுமை ’ என்கிறது தொல்காப்பியத்திலுள்ள ஒரு நூற்பா. அக்காவோ, தாத்தாவோ அல்லது நெருங்கிய உறவினர்களோ நம் வீட்டுக்கு வந்தால், அவர்கள் எல்லாம் விருந்தாளிகள் இல்லையாம். யாரோ முகந்தெரியாமல் வருகிற ஒருவரை வரவேற்று உபசரிப்பதற்குப் பெயர்தான் விருந்து.                நண்பர்களுக்கு விருந்தளிப்பது கடமை. உறவினர்களுக்கு விருந்தளிப்பது உரிமை. நம்மூரைப் பொறுத்தவரை, சிலப்பதிகாரத்திலும், கம்பராமாயணத்திலும் விருந்தைப் பற்றிச் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. திருவள்ளுவர் விருந்தோம்பலைப் பற்றித் தனி அதிகாரமே படைத்திருக்கிறார். வீட்டுக்கு வந்த விருந்தாளியைக் காக்க வைத்துவிட்டு அமிர்தமாக இருந்தாலும் சாப்பிடக்கூடாது என்கிறார் அவர்.                மழைக்காலத்தில் ஊருக்குள் நுழைகிறவன் அங்கு தங்கிக்கொள்ள முடியும் என்பதற்காகத்தான், கிராமப்புறங்களில் வீட்டுத்திண்ணை என்கிற ...